​கர்நாடகாவில் காங்கிரஸ் செயற்குழுவில் இந்திய வரைபடம் தவறாக இடம்பெற்றதற்கு பாஜகவினர் எதிர்ப்பு

0
247

கர்நாட​கா​வில் காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டம் நேற்று தொடங்கியது. இதில் வைக்​கப்​பட்​டிருந்த பதாகை​யில் தவறான இந்திய வரை​படம் இடம்​பெற்றது சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

க‌ர்நாடக மாநிலத்​தில் உள்ள பெலகாவியில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அண்ணல் காந்தி தலைமை​யில் காங்​கிரஸ் மாநாடு நடைபெற்​றது. இதன் 100வது ஆண்டையொட்டி, அங்குகாங்​கிரஸ் சிறப்பு செயற்​குழு கூட்டம் அதன் தேசிய தலைவர் மல்லி​கார்ஜூன கார்கே தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் மக்களவை எதிர்க்​கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்த​ராமையா, காங்​கிரஸின் மூத்த தலைவர்கள் நூற்றுக்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்​றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும் போது, “அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாஜக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை வரையறுத்த அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாக பேசியுள்ளார். இந்த விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். நடப்பு டிசம்பர் மாதம் முதல் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி வரை மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப உள்ளோம். இதுதொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்​கப்​பட்​டுள்​ளது. அதில் வைக்​கப்​பட்டிருந்த இந்திய வரை​படத்​தில் ஜம்மு காஷ்மீர் இடம்​பெற​வில்லை. இதனால் சர்ச்சை ஏற்பட்​டுள்​ளது.

இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்​திரா, ‘‘பெலகா​வி​யில் காங்​கிரஸ் ஒட்டிய பதாகை, சுவரொட்​டிகளில் தவறான இந்திய வரைபடம் இடம்​பெற்றுள்​ளது. அதில் பாகிஸ்​தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்​கிட் பகுதி​யும், தற்போது சீன நிர்​வாகத்​தின் கீழ் உள்ள அக்சாய் சின் பகுதி​யும் இல்லை. அவை ஜம்மு காஷ்மீரின் ஒருங்​கிணைந்த பகுதி​களாகும். இதனை காங்​கிரஸ் மறந்​திருக்​கிறது. ராகுல் காந்தி எப்போதும் பாகிஸ்​தானுக்​கும் சீனா​வுக்​கும் ஆதரவாக இருப்​பார்”என விமர்​சித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here