தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 21ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி, குளச்சல் மற்றும் குறும்பனை பகுதிகளில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி, வாக்காளர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் 5 பேரிடம் இருந்து 231 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.














