Google search engine
சட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பதே கிடையாது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்கி கொள்ளக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதன்படி 116-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இன்று தேசிய மாணவர் படையின் (என்சிசி ) தினமாகும். நானும் என்சிசி...
இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை தொழிலதிபர் எலான் மஸ்க் பாராட்டி உள்ளார். அதேநேரம் அமெரிக்க தேர்தல் முறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது எப்படி’ என்ற ஒரு ஊடக செய்தித் தலைப்பின் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை நேற்று டேக் செய்துள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான்...
ஜார்க்​கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இதையடுத்து ராஞ்​சி​யில் 28-ம் தேதி நடைபெறும் விழா​வில் மீண்டும் முதல்வர் பதவி​யேற்​கிறார் ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் மொத்தம் உள்ள 81 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்​றது. இதில் ஆளும் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்​எம்), காங்​கிரஸ் மற்றும் சில கட்சிகள் இண்டியா கூட்​ட​ணியாக போட்​டி​யிட்டன. பாஜக தலைமை​யில் அதன் கூட்டணி கட்சிகள் போட்​டி​யிட்டன. இந்த...
நாட்டை பிரிக்க நினைப்பவர்களுக்கு மகாராஷ்டிர தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர் என பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்திலிருந்து நேற்று டெல்லி புறப்பட்ட பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். தேர்தல் பிரச்சாரத்தின்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மோடி, மோடி என முழக்கமிட்டத்தை பார்க்க முடிந்தது....
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் வென்ற சுயேட்சை வேட்பாளரின், வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் காயம் அடைந்தனர். மகாராஷ்டிரா சந்த்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சிவாஜி பாட்டீல். இவர் போட்டியிட பாஜக சீட் வழங்கவில்லை. இதனால் இவர் இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானபோது சிவாஜி பாட்டீல் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்...
உ.பி.யில் 2027 சட்டப்​பேரவை தேர்​தலுக்கான அரை இறுதிப் போட்​டியாக 9 தொகு​திகளுக்கான இடைத்​தேர்தல் கருதப்​பட்​டது. ஆனால் சமாஜ்வாதி வெறும் 2 தொகு​தி​களில் மட்டுமே வெற்றி பெற்றுள்​ளது. இந்த இரு தொகு​தி​களில் கர்ஹாலில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எம்எல்​ஏவாக இருந்​தார். இங்கு சமாஜ்வாதி சார்​பில் லாலு யாதவின் மருமக​னும், பாஜக சார்​பில் முலாயம் சிங்​கின் மருமக​னும் போட்​டி​யிட்​டனர். இறுதி​யில் சமாஜ்வா​தி​யின் தேஜ் பிரதாப் யாதவ் வெற்றி பெற்​றார். மற்றொரு தொகு​தியான...
அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல செய்திகள் வெளியாயின. அதானி குழுமத்தின் ஒட்டு மொத்த தொழிலில், அதானி கிரீன் எனர்ஜியின் இந்த ஒப்பந்தம் வெறும் 10 சதவீதம்தான். அதானி குழுமத்தில் மொத்தம் 11 நிறுவனங்கள் உள்ளன. இதில் எந்த நிறுவனமும் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில்...
மகாராஷ்டிராவின் 75 தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் நேரடியாக மோதின. இதில் 65 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அந்த மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க...
புதுடெல்லி: ம​காராஷ்டிரா மற்றும் ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்​த லில் நோட்​டாவுக்கு குறைவான வாக்​குகளே பதிவாகின. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்​தினம்வெளி​யானது. இதில், மகாராஷ்டிரா​வில் யாருக்​கும் வாக்​களிக்க விரும்ப​வில்லை (நோட்டா) என 0.75% வாக்​காளர்கள் தெரி​வித்​தனர். இதுபோல ஜார்க்​கண்ட் தேர்​தலில் 1.32% பேர் நோட்​டாவுக்கு வாக்​களித்​தனர். மகாராஷ்டிர தேர்தலில் 65.02% வாக்​கு​களும், ஜார்க்​கண்​டில் 2 கட்டமாக நடைபெற்ற தேர்​தலில் 66.65% வாக்​கு​களும் பதிவாகின. நோட்டா முறை...
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​தனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்து கோயில் இருந்​த​தாக​வும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை...