தேர்தல் ஆணையம், சட்டத்துக்கு யாரும் பயப்படுவதில்லை, டெல்லியில் பணம், மது, தங்கச் சங்கிலிகளை வாக்காளர்களுக்கு பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பரிசாக வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் கண்முன்னே பழங்குடியின சிறுமியை குழுவாக சேர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் பஹாடி கோர்வா பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 2021-ம் ஆண்டு வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்தது. மேலும், அந்த சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த தந்தை உள்ளிட்ட இருவரை கற்களால் அடித்து அந்த கும்பல்...
ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சுவாமியை அடித்து கொன்ற வழக்கில் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக...
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) கூட்டத்தில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி வக்பு வாரிய சட்டத்திருத்த மாசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில்...
தீவிரவாதிகள் சுரங்கம் தோண்டி ஊடுருவதை தடுப்பதற்காக ஜம்முவில் சர்வதேச எல்லை நெடுகிலும் 25 கி.மீ. தொலைவுக்கு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அகழி தோண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடைசியாக கடந்த 2022-ல் எல்லையில் ஊடுருவல் சுரங்கப் பாதையை பிஎஸ்எப் கண்டறிந்தது. ஜம்முவில் அமைதி நிலவிய பல பகுதிகளில் கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பல ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு...
பெங்களூருவில் விவாகரத்து மனுவை மனைவி திரும்பப் பெற மறுத்ததால் அவரது வீட்டின் முன்பு தீக்குளித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள குனிகலை சேர்ந்தவர் மஞ்சுநாத் (39). வாடகை கார் ஓட்டுநரான இவர் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த நயனா ராஜுவுக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் இந்த தம்பதியினர் இடையே கடந்த...
மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுத தொழில்சாலையில் நேற்று காலை நடைபெற்ற வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் ஜவஹர் நகர் என்ற பகுதியில் ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வெடிமருந்து தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர். இங்கு தீயணைப்பு படையினர்...
ரஜவுரியில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நச்சுப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற மலை கிராமத்தில், கடந்த ஒன்றரை மாதங்களில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேர் 3 முதல் 15 வயது கொண்ட சிறார்கள். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின்...
உ.பி. மாவ் மாவட்​டத்​தில் ஒரு கிராமத்​தில் வசிப்​பவர் வங்கிக் கணக்​கில் ஒரே நாளில் ரூ.37 லட்சம் வரவு வைக்​கப்​பட்​டது. இதில் சந்தேகப்​பட்ட மத்திய பொருளாதார குற்​றப்​பிரி​வினர், இதுகுறித்து விசா​ரிக்க மாவ் மாவட்ட காவல்துறை கண்காணிப்​பாளரான (எஸ்​.பி.) ஜி.இள​மாறனுக்கு தகவல் அளித்​தனர். தமிழ்​நாட்​டின் மன்னார்​குடி கருவாச்​சிக் கிராமத்​தைச் சேர்ந்த தமிழர் இளமாறன், கால்நடை மருத்​துவம் படித்த பின்னர் 2016-ல் ஐபிஎஸ் தேர்​வில் வெற்றி பெற்​றவர். இவரது விசா​ரணை​யில், வங்கிக் கணக்கை வைத்​துள்ளவருக்கு...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் (Guillain-Barre Syndrome) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதுவரை 73 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நோய் குறித்து மகாராஷ்டிரா சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஆட்டோ இம்யூன் நோய் என்றால் என்ன? ஆட்டோ இம்யூன் நோய்கள் (AID - Auto-Immune diseases) என்பவை, நம் நோய்...