Google search engine

திருவட்டாறு: தீயில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்

திருவட்டாறு அருகே அணைக்கரை பகுதியைச் சேர்ந்த 77 வயதான கோமதி, தனியாக வசித்து வந்தார். அவரது பேரன் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்து வந்தார். நேற்று உணவு கொடுக்கச் சென்றபோது, மூதாட்டி தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து திருவட்டாறு போலீசாருக்குத் தகவல்...

கருங்கல்: கால்வாயில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

பாலூர் கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த 51 வயதான தொழிலாளி மோகன்தாஸ், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கால்வாய் கரையில் அமர்ந்திருந்தபோது தவறி கால்வாயில் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக...

நாகர்கோவில் பாலம் விரிவாக்க பணி மேயர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினச்சேரியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடர்ந்து இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணனும் உடனிருந்தார்.

குமரி: நிதி நிறுவன பெண் ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி

மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரதி (43) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியரின் வீட்டில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். ரதி சத்தம் போட்டதால் திருடன் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு...

திருவட்டாறு: கோயில் அருகே டாஸ்மாக் கடை ; பாஜக போராட்டம்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடை, பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அதை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருவட்டாறு ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் சுவாமிதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்

பளுகல்: வியாபாரியிடம் 15 பவுன் நகை மோசடி – வழக்கு பதிவு

இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷைலாஷ் (54) என்பவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி பிரிட்டோவிற்கு (35) 15 பவுன் தங்க நகைகளை கடனாகக் கொடுத்துள்ளார். நகைகளை பிரிட்டோ திருப்பித் தராததால், ஷைலாஷ் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், பளுல் போலீசார்...

கொல்லங்கோடு: பைக் விபத்து; தந்தை, 8 வயது மகன் படுகாயம்

நேற்று இரவு இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி சகாய ஜேம்ஸ் (38), தனது மகன் ஜான் பெலிக்ஸ் (8) மற்றும் உறவினர் ஒருவருடன் பொழியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லங்கோடு பகுதியில் மற்றொரு பைக் சகாய ஜேம்ஸ் பைக்கில்...

சர்வதேச யோகா சேம்பியன் போட்டி; குமரி மாணவர் சாதனை

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச யோகாசன சேம்பியன்ஷிப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது மாணவர் விஹான், கால் சமநிலை மற்றும் பாரம்பரிய குழு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த...

இரணியல்: பிளஸ் 1 மாணவி கர்ப்பம் ; இசை கலைஞர் கைது

இரணியல் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது, சிங்காரி மேளமடிக்கும் இசைக்கலைஞரான கதிஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் 20ஆம் தேதி, கதிஷ் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை...

பளுகல்: விபச்சாரம் நடத்திய லாட்ஜுக்கு சீல்

தேவிகோடு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவருக்குச் சொந்தமான பளுகல் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை நடத்தி, கேரளாவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று அதே லாட்ஜில்...