கருங்கல்: மாணவர்களை திரட்டி போராட்டம்.. எம் எல் ஏ அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: - தமிழக பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் சார்ந்த திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதி உதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் இந்த நிதி...
கன்னியாகுமரி: வாய்ச்சவடால் விடுபவர் தான் அண்ணாமலை; அமைச்சர் கீதா ஜீவன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான்; அவர் பேசுவதை அவரை வாபஸ் பெற்றுக் கொள்வார்; திமுகவை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் அழிந்து போனதாக தான்...
நாகர்கோவிலில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புசார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட்ஜோஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுபின், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,...
புதுக்கடை: எல்லை பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே முஞ்சிறை பண்டாரப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் தற்போது பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீபா (38). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதுவரையிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஸ்ரீபா...
இரணியல்: ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்
இரணியல் அருகே உள்ள காரங்காடு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ரோஸ்லெட் (54). நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நாகர்கோவிலுக்குச் செல்வதற்காக பேயன்குழி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறினார். அப்போது அவர் சென்ற பஸ்சில் கூட்டம் அதிகமாக...
திற்பரப்பு: குளத்தில் மண் எடுப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்
திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் விலவூர் கோணம் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீரமைப்பு பணி நடைபெற்ற போது ஏராளமான டெம்போக்களில் குளத்து மண் கடத்தப்பட்டதாக புகார் இருந்தது.
இந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் குளங்களில் வண்டல் மண் எடுக்க...
புதுக்கடை: கார்கள் மோதல்; 3 பேர் காயம்
புதுக்கடை அருகே செந்தறை பகுதியை சேர்ந்தவர் நெல்சன் மகன் நிக்சன் (24). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சம்பவ தினம் தனது தந்தை நெல்சன் (63), தாய் பிரான்சிஸ்காள் (57), வீட்டு வேலையாள் சுகந்தி (47) ஆகியோருடன் காரில் தேங்கா பட்டணம் - கருங்கல்...
நித்திரவிளை: கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ
நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் நேற்று (பிப்ரவரி 14) இரவு 9 மணி அளவில் கிராத்தூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே பயணிகள் ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது.
போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ...
நாகர்கோவிலில் எஸ். டி. பி. ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்பு திருத்த சட்ட மசோதா நேற்று (பிப்.13) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்பிக்...
நாகர்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்க பயிற்சி பட்டறை
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை. நலவாரியங்களை கொண்டு வருவதிலும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய சி.ஐ.டி.யு ஸ்தாபகர்களில் ஒருவரான பாலாநந்தனின் 100வது நினைவு நாளை முன்னிட்டு தொழிற்சங்க பயிற்சி பட்டறை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு மாநில துணை பொது செயலாளர்...













