Google search engine

மண்டைக்காடு: கோவில் திருவிழா; எஸ்.பி நேரில் ஆய்வு

குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 2-ஆம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.  ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 88-வது சமய...

கருங்கல்:  மின்கம்பத்தில் மோதிய லாரி ; பொதுமக்கள் மடக்கினர்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில்  தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்ற டிரைவர் கீழ்குளம் பகுதியில் ஜல்லி ஏற்றி கொண்டு வந்துள்ளார். ஜல்லி இறக்கிவிட்டு நாகர்கோவில்  நோக்கி புறப்பட்டார்.  ...

தக்கலை: அடுத்தவர் மனைவியை அபகரித்த ஏட்டு.. புகார்

தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரி ஓட்டுநர். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளறடை பட்டினத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 16 வயதில் மகளும் 11 வயதில் மகனும் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2022...

மார்த்தாண்டம்: சாலை சீரமைக்க வர்த்தகர்கள்  அமைச்சரிடம் மனு

மார்த்தாண்டம் சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலைகள் குண்டு குழியாக படுமோசமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மழைநீர் சாலை வழியாக பாய்ந்து சாலையின் இரு புறங்களில் உள்ள கடைகளில் புகுந்து கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.  மார்த்தாண்டம் பகுதி சாலைகளை விரிவாக்கம் செய்து, வடிகால் வசதியுடன் சீரமைக்க...

பொன்மனை: புலி நடமாட்டம் – சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே குரங்குகள், கரடிகள், பாம்புகள், மிளகாய், காட்டு யானைகள் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இப்போது புலி தொல்லையும் ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வேளிமலை தோட்ட தொழிலாளர்கள் வேலை...

கொல்லங்கோடு:  அதிக குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ மீது நடவடிக்கை

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியில் தமிழக பதிவு கொண்ட பயணிகள் ஆட்டோவில் அதிகமான மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்றது குறித்து செய்திகள் வெளியானது.  இது போன்ற சம்பவங்கள் மீனவ கிராமங்களில் வாடிக்கையாக நடந்து வருவதாகவும், உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்றும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம்...

நித்திரவிளை:  மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

நித்திரவிளை அருகே மேலமட விளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). கொத்தனார். இவருடைய மனைவி விஜயராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். மதுபோதையில் இருக்கும் போது தனக்கு வாழ பிடிக்கவில்லை என அவர் கூறுவாராம்.  இந்த நிலையில்...

கன்னியாகுமரி: லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக சால்வன் துரை பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சி. சால்வன் துரை இன்று பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வாளராக சென்ற இவர் தற்போது...

நாகர்கோவில்: கடையை பூட்டியதால் மாற்றுதிறனாளி குடும்பத்துடன் தர்ணா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் அருகே பிள்ளையார்கோவில் தெருவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளி இராமசாமியின் கடையை அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஆக்கிரமித்து கடையில் உள்ள பொருட்களை தெருவில் வீசி...

குளச்சல்: துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு; மீனவர்கள் கவலை

குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் உயர்ரக மீன்களான...