ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் 24-ல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக் ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையேயான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 27-ல்...
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி வரும் 6-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தென் மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான அணியில் திலக் வர்மா, இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ள டி 20 தொடருக்கான இந்திய...
ஆசிய விளையாட்டு வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 73 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் புதுப்பிக்கப்பட்ட 77 பேர் கொண்ட அணியை இந்திய தடகள கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
இதில் காயம் காரணமாக விலகி உள்ள...
ரோஹித் சர்மாவின் எதிர்காலம்… ஊகங்களுக்கு ‘தீனி போட’ விரும்பவில்லை: பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அதிரடி
admin - 0
ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும் இதனால் அவரது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு ‘தீனி போட’ விரும்பவில்லை என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ஷுப்மன் கில், டி 20 கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், பெங்களூரு பிசிசிஐ உயர்திறன்...
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 14-21, 7-21 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 38 நிமிடங்களில் முடிவடைந்தது.
மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஷி...
கனடாவின் வின்னிபெக் நகரில் 'பான் அம்கப்' பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துருவ் சித்வாலா, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை எதிர்த்து விளையாடினார்.
இதில் துருவ்சித்வாலா 972-1500 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் பெற்றார். ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியனான சித்வாலா தொடக்கத்தில் 450 புள்ளிகள் முன்னிலையில் இருந்த போதிலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.
ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதல்...
திலக் வர்மா அரை சதம் விளாசல்: இறுதிப் போட்டியில் தென் மண்டலம் – சேப்பாக்கத்தில் 6-ம் தேதி கிழக்கு மண்டலத்துடன் மோதல்
admin - 0
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டலம் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் மண்டலம் அணி.
பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டலம் 195 ரன்களும், கிழக்கு மண்டலம் 312 ரன்களும் எடுத்தன. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வடக்கு மண்டலம் அணி நேற்றைய 4-வது நாள்...
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வரும் அக்டோபர் 26 முதல் 29 வரை சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய 13 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் ஜெர்சி அறிமுக விழா சென்னை...
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மத்திய மண்டலம் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிழக்கு மண்டலம் அணி.
பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலம் அணி 266 ரன்களும், கிழக்கு மண்டலம் 266 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 50.2...









