Google search engine
வேளச்சேரி - பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்​சார ரயில் மூல​மாகசோதனை ஓட்​டத்தை மேற்​கொண்​டார். இது வெற்​றிகர​மாக நிறைவடைந்​த​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். சென்னை கடற்​கரை - வேளச்சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில் வழித்​தடம்) தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் பணி 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு நிறைவடைந்​துள்​ளது. இதையடுத்​து, இத்​தடத்​தில் கடந்த ஆண்டு...
கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யில் அரசு மருத்துவர்கள் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் கொண்டு வரப்​பட்ட அரசாணை 354-ன் படி, மருத்​து​வர்​களுக்கு உரிய கால​முறை ஊதிய உயர்வு மற்​றும் பதவி உயர்​வு​களை வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்​வேறு போராட்​டங்​களை முன்​னெடுத்து வந்​தனர். தீர்வு கிடைக்​காத நிலை​யில், சென்னை மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை வளாகத்​தில்...
ராஜீவ்​காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்​பிலான மருத்​துவ உபகரணங்​களை மக்​கள் பயன்​பாட்​டுக்​கு, சுகா​தார துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். சென்​னை, ராஜிவ்​காந்தி அரசு மருத்துவமனையில், ரூ.7.39 கோடி மதிப்​பிலான மருத்​துவ உபகரணங்​கள், 108 ஆம்​புலன்ஸ் சேவையை மேம்​படுத்​தும் வித​மாக வாட்ஸ் அப் செயலியை மக்​கள் பயன்​பாட்​டுக்​காக சுகா​தார துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார். அத்​துடன், ‘ஜெ.எம்​.எம்​.சி.’ என்ற மருத்​துவ இதழை தொடங்கி வைத்​ததுடன், ரூ.60 லட்​சம்...
அண்ணா பல்​கலை. உறுப்​புக் கல்​லூரி​கள் மற்​றும் மண்டல வளாகங்​கள் தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஜெய்​சன், ராஜ்கு​மார், கோசலை ஆகியோர், சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறுகையில், அண்ணா பல்​கலை.யின் 13 உறுப்​புக் ​கல்லூரி​கள் மற்​றும் 3 மண்டல வளாகங்​களில் 328 தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் 10,15 ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்​தோம். பணிநீட்டிப்பு கடந்த டிச.31-ல் முடிவடைந்த நிலை​யில் அதன்​பிறகு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதனால், நாங்​களும் எங்​கள் குடும்​பத்​தினரும்...
பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரி​யார் சிலையை உடைப்​பேன் என ட்விட்​டரில் பதிவு வெளி​யிட்​டது, திமுக எம்பி கனி​மொழிக்கு எதி​ராக தரக்​குறை​வாக கருத்து தெரி​வித்​த​தாக​வும் அவர் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. வழக்​கு​களை விசா​ரித்த எம்பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றம், ஹெச்​.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்​டனை விதித்து கடந்த 2024-ல் தீர்ப்​பளித்​தது. இதை எதிர்த்து ஹெச்​.​ராஜா தரப்​பில் சென்னை உயர்...
வரு​வாய், பேரிடர் மேலாண்​மைத் துறை​யின் கீழ் இயங்​கிவரும் நில அளவை, மற்​றும் நில​வரித் திட்​டத் துறை​யால் இணை​ய​வழி ஆவணங்​களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்​றும் புலப்​படம் ஆகியவை இணை​ய​வழி பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த ஆவணங்​களின் விவரங்​களை ஒருங்​கிணைத்​து, நில உரிமை​தா​ரர்​களுக்கு ‘ஒருங்​கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவையை​யும், இணை​ய​வழி​யில் ஒரு புல எண்​ணில் நடை​பெறும் பட்டா மாறு​தல் விவரங்​களை பொது மக்​கள் தெரிந்து...
நெடுஞ்​சாலைத் துறை சார்​பில், அண்ணா சாலை​யில் தேனாம்​ பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை ரூ.621 கோடி​யில் 3.20 கி.மீ.க்கு கட்​டப்​படும் நான்கு வழித்தட உயர்​மட்ட சாலை கட்​டு​மானப் பணியை முதல்​வர் ஸ்டா​லின் ஆய்வு செய்​தார். சென்னை, அண்ணா சாலை​யில் தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை போக்​கு​வரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்​தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்​கள் ஆகின்​றன. இந்த நிலை​யில், போக்​கு​வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகை​யில், எல்​டாம்ஸ்...
நகைப்​பட்​டறை​யில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்​தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். சென்னை சவு​கார்​பேட்​டை, சிங்​கண்​ணன் தெரு​வில், 4 மாடி கட்​டிடத்​தில் நகைப்​பட்​டறை ஒன்று செயல்​பட்டு வந்​தது. மேற்கு வங்க மாநிலம், கொல்​கத்​தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்​பவர் இந்த நகைப்​பட்​டறையை நடத்தி வந்​தார். இந்த பட்​டறை​யில் வடமாநிலத்​தைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் தங்கி வேலை பார்த்து வந்​தனர். இங்கு பழைய,புதிய...
உபா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு விசா​ரணை இன்றி சிறை வைக்​கப்​பட்​டுள்ள மாணவர்​களை விடு​தலை செய்ய கோரி, தமிழ்​நாடு சிறு​பான்மை மக்​கள் நலக்​குழு சார்​பில், கையெழுத்து இயக்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. சட்​ட​விரோத செயல்​பாடு தடுப்பு (உபா) சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு விசா​ரணை இன்றி சிறை வைக்​கப்​பட்​டுள்ள உமர் காலித், ஷார்​ஜீல் இமாம் ஆகியோரை விடு​தலை செய்ய கோரி​யும், வழக்​கு​களை ரத்து செய்ய கோரி​யும், தமிழ்​நாடு சிறு​பான்மை மக்​கள் நலக்​குழு சார்​பில், கையெழுத்து இயக்​கம்...
சட்​டப்​பேரவை தேர்தல் அறிக்​கை​யில் பட்​டியல் மாற்​றம் முதல் கச்​சத்​தீவு வரை இடம்​பெற வேண்​டிய மீனவர்​களின் கோரிக்​கைகள் குறித்து அரசி​யல் கட்​சிகளுக்​கு, தமிழ்​நாடு மீன்​பிடி தொழிற்​சங்க கூட்​டமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது. சட்​டப்​பேரவை தேர்​தலில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற வேண்​டிய மீனவர்​களின் நீண்​ட​கால கோரிக்​கைகள் குறித்த ஆய்​வறிக்​கை​யை, தமிழ்​நாடு மீன்​பிடி தொழிற்​சங்க கூட்​டமைப்​பு, திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சி​யினரை சந்​தித்து நேற்று அளித்​தனர். அதில் கூறி​யிருப்​ப​தாவது: மீனவர்​களின் நீண்​ட​கால...