Google search engine
பரபரப்புக்கு பஞ்சமில்லாத தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், “வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்தை பிச்சை போடுவது போல் இருக்கிறது?” என கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக ஆத்திரத்தைக் கொட்டி இருப்பதுடன் இன்னும் சில குறைகளையும் சூடாக சுட்டிக்காட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் பேசியதிலிருந்து… வெள்ள நிவாரணமாக சென்னைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும்போது வடமாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்குவது பிச்சை போடுவது போல...
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் கோவையில் நேற்று உயிரிழந்தார். கோவை தெற்கு உக்கடம், பொன் விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவராக இவர் இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக...
மதுரை​யில் கல்வி​யியல் கல்லூரி பெண் முதல்​வருக்கு பாலியல் தொல்லை அளித்த கல்வி​யியல் பல்கலைக்கழக முன்​னாள் பதிவாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளுபடி செய்​யப்​பட்டும், இன்னும் அவரைக் கைது செய்​யாதது ஏன்? என உயர் நீதி​மன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. மதுரையைச் சேர்ந்த பெண் பேராசிரியர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: மதுரை​யில் உள்ள தனியார் கல்வி​யியல் கல்லூரி​யில் முதல்​வ​ராகப் பணியாற்றி வருகிறேன். எங்கள் கல்லூரி தமிழ்​நாடு கல்வி​யியல்...
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டிச.24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு புகழேந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம்...
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகும் அரசு அதிகாரிகள் அனைத்து பண பலன்களுடனும் ஓய்வு பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் பார்த்த வேலைகளுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம்...
தமிழகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக பாஜக மாநில மையக் குழு ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா,...
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி, உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி பெறுவதற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்.2-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின்,...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இண்டியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இண்டியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும். அதிபர் தேர்தல் நடத்துவதுபோல பொதுத் தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன்...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி...
‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ நிகழ்ச்சியை ஜன.13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், சென்னை...