சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி உருவாக்கியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, வரும் மே 21-ம் தேதி முதல்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், பூந்தமல்லி பணிமனையில் 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை...
ஒருவழியாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள்.
சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தவெக என சிறிய கட்சிகளுக்கு 4 விதமான கூட்டணி வாய்ப்புகள் இருந்தன. அது இப்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரண்டாக சுருங்கிவிட்டது. அதிமுக, தவெக ஆப்ஷன்கள் இருந்தவரை திமுக...
‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ – கச்சைகட்டும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர்!
admin - 0
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்க வேண்டும் அங்கிருக்கும் கட்சிகளுக்கும் சபலத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே கட்சியின் முதல் மாநாட்டிலேயே போகிற போக்கில் ‘அதிகாரத்தில் பங்கு’ என்று கொளுத்திப் போட்டார் விஜய். அது இப்போது நன்றாகவே பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.
“2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்”...
பாரதிதாசன் படத்துக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை: இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றியவர் என புகழாரம்
admin - 0
பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏப்.29-ம் தேதிமுதல் மே 5-ம் தேதி வரை தமிழ் வளர்ச்சி வாரமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாரதிதாசன் பிறந்த தினத்தை ஒட்டி,...
காவல், சிறை, தீயணைப்பு துறைக்கு புதிதாக 3,363 காவலர்கள் தேர்வு: பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்
admin - 0
காவல், சிறைத் துறை, தீயணைப்புத் துறைக்கு புதிதாக 3,363 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது: கோவை - நீலாம்பூர், சிவகங்கை - கீழடி, திருநெல்வேலி - மேலச்செவல், திருப்பூர் - பொங்கலூர், கள்ளக்குறிச்சி - களமருதூர்,...
ரூ.968 கோடி மிகை செலவுகளுக்கான மானிய கோரிக்கைகள்: பேரவை ஒப்புதல் கோரி தங்கம் தென்னரசு தாக்கல்
admin - 0
கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில், ரூ.968.11 கோடி மதிப்பிலான மிகைச் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 2019- 20, 20-21 மற்றும் 21-22-ம் ஆண்டுகளில் மிகைச் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகைளை, அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளி்ன் நிதியொதுக்க கணக்குகளை பொதுக்கணக்குக் குழு ஆய்வு...
சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மார்ச் 14-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 15-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 24-ம் தேதியிலிருந்து துறை தோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை துரைமுருகன் முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து,...
அமைச்சரவையில் விடுவிக்கப்பட்ட பொன்முடி, செந்தில்பாலாஜி இருவரும் 2-வது நாளாக பேரவைக்கு வரவில்லை. தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் அமைச்சரவையின் முதல் வரிசையில் இருந்த பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்த செந்தில்பாலாஜி பெயரும் நீக்கப்பட்டு, 3-வது வரிசைக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் பேரவைக்கு வரவில்லை.
இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான நேற்று இருவரும் பேரவைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது....
கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து 20 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
இந்த துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்....










