Google search engine
தொழிற்​சங்க சொத்து விவ​காரத்​தில் வைகோ விவரம் தெரி​யாமல் பேசுகிறார். பஞ்​சாலை தொழிற்​சங்க சொத்​துகளை எந்​தக்​கட்​சி​யும் கட்​டுப்​படுத்த முடி​யாது என திருப்​பூர் சு.துரை​சாமி தெரிவித்துள்ளார். மதி​முக​வின் முன்​னாள் அவைத்​தலை​வ​ரான திருப்​பூர் சு.துரை​சாமி நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: வைகோவுக்கு நெருக்​கடி ஏற்​பட்ட காலத்​தில் அவருக்​குப் பக்​கபல​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக நான் திமுக​விலிருந்து வெளியே வந்​தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அபகரித்​துள்​ள​தாக வைகோ பேசி​யுள்​ளார். பஞ்​சாலைத் தொழிலா​ளர்​கள் சங்​கத்​துக்​கென்று...
ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என்று பழனி​சாமி பேசி​ய​தில், எந்த உள்​நோக்​க​மும் இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். நாகை மாவட்​டம் உத்​தம சோழபுரத்​தில் வெட்​டாற்​றின் குறுக்கே கட்​டப்​படும் தடுப்​பணைபணியை நிறுத்​தி​விட்​டு, ஏற்​கெனவே அறி​வித்த பூதங்​குடி பகு​தி​யில் தடுப்​பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்​பில் வாஞ்​சூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது:...
முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மு.க.முத்துவின் மறைவு மிகவும் வருத்தம் அளித்தது....
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது திமுக தலைமை. இதற்கு, வயோதிகத்தைக் காரணமாகச் சொன்னாலும் இதனால் ஐ.பி ஆதரவு வட்டாரம் சற்று திகைத்தே நிற்கிறது. திமுக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி தென் மாவட்ட திமுக-வில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக வென்றிருக்கும் இவர்,...
 திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பாஜகவினரும் பங்கேற்க...
மாநில தலைவராக அண்ணாமலை இருந்தவரைக்கும் தமிழக பாஜக பரபரப்பான கட்சியாகப் பார்க்கப்பட்டது. திமுக, அதிமுக கொடிகள் கட்டிய கார்களுக்கு நிகராக பாஜக கொடி கட்டிய கார்களும் பட்டி தொட்டிகளில் கூட பவனி வந்தன. ஆனால், தற்போது இவை அனைத்துமே ஸ்லீப் மோடுக்குப் போய்விட்டது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. போதாக்குறைக்கு, அதிரடி அரசியல்வாதியான அண்ணாமலையும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழிக்குமளவுக்கு ‘சும்மா’ இருக்கிறார். தமிழக பாஜக-​வின் புதிய தலை​வ​ராக...
திருநின்​றவூர் நகராட்​சியை கண்​டித்து அதி​முக சார்​பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது. இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்​றவூர் நகராட்சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்பை சரிவர அள்​ளப்​ப​டாத காரணத்​தால் சுகா​தா​ரச் சீர்​கேடு உள்​ளிட்ட பல்​வேறு சிரமங்​கள் ஏற்​பட்​டுள்​ளன. கொசுக்​களை அழிப்​ப​தற்​காக நகராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் கொசு மருந்து அடிப்​ப​தில்​லை. மேலும், இப்​பகு​தி​யில் உள்ள சாலைகள் சீரமைக்​கப்​ப​டா​மல் உள்​ளன. தெரு விளக்​கு​கள் சரிவர எரிவ​தில்​லை....
கடலூர் மாவட்​டம் பண்​ருட்டி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த 2016-21 வரை எம்​எல்​ஏ​வாகப் பதவி வகித்​தவர் சத்யா பன்​னீர்​செல்​வம். அதே காலத்​தில் அவரது கணவ​ரான பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக இருந்​தார். பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக பதவி வகித்த காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் கடந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் அவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அதன் பின்​னர் கட்​சிப் பணி​களில் தீவிர​மாக சத்யா பன்​னீர்​செல்​வம்...
வீடு​களுக்கு வரும் திமுக​வினரிடம் மக்​கள் கேள்வி​களை கேட்க வேண்​டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் கோவை சென்​றார். முன்​ன​தாக, சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஒரு​வர் குழந்​தையை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். சிசிடிவி காட்​சிகள் கிடைத்து 5 நாட்​கள் ஆகி​யும், இன்​னும் பிடிப்​ப​தற்கு நடவடிக்கை எடுக்​க​வில்​லை....
வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி சொல்லாததால் சிஎம்டிஏ உறுப்பினர் செயலரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானதால் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. சென்னையைச் சேர்ந்த ரத்தினசபாபதி என்பவர், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக சென்னை 19-வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில்...