Google search engine
இண்டிகோ விமான சேவை​ 8-வது நாளாக நேற்​றும் பாதிக்​கப்​பட்​டது. ஹைத​ரா​பாத் சம்​ஷா​பாத் விமான நிலை​யத்​தில் நேற்று வரவேண்​டிய 14 விமானங்​கள், புறப்பட வேண்​டிய 44 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதே​போன்று விசாகப்​பட்​டினத்​தில் இருந்து ஹைத​ரா​பாத், பெங்​களூரு செல்​ல​ வேண்​டிய 6 இண்டிகோ விமான சேவை​களும் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் மிக​வும் அவதிக்கு ஆளாகினர். இண்டிகோ விமான சேவை பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால் ஸ்பைஸ் ஜெட் நிறு​வனம் நாடு முழு​வதும் கூடு​தலாக 100 விமானங்​களை...
தொழில​திபர் அனில் அம்பானி தலை​மையி​லான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரிலை​யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு​வனம் (ஆர்​எச்​எப்​எல்), யூனியன் பாங்க் ஆப் இந்​தி​யா​வில் (முன்பு ஆந்​திரா வங்​கி) வாங்​கிய ரூ.228 கோடி கடனை முறை​யாக திருப்​பிச் செலுத்​த​வில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்​து, கடந்த 2019-ம் ஆண்டு செப்​டம்​பர் 30-ம் தேதி, இந்​தக் கடனை வாராக் கடனாக வகைப்​படுத்​தி​யது. மேலும் இது...
கோவாவின் அர்போரா கிராமத்தில் 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 அதிகாரிகளை கோவா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கியது. தீ விபத்தை தொடர்ந்து தாய்லாந்து தப்பிச் சென்ற கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா (40),...
நாடாளு​மன்​றத்​தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், முஸ்​லிம்​களின் முக்​கிய அமைப்​பான ஜமி​யத் இ உலாமா ஹிந்த் அமைப்​பின் மவுலானா அர்​ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதி​வில் கூறி​யிருப்​பாவது: வந்தே மாதரம் பாடு​வதை நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. முஸ்​லிம்​கள் அல்​லாவை மட்​டுமே வணங்​கு​கிறார்​கள். அல்​லா​வைத் தவிர வேறு யாரை​யும் எங்​கள் வழி​பாட்​டில் சேர்க்க முடி​யாது. வந்தே மாதரத்​தின் மொழிபெயர்ப்பு ஷிர்க் (பாவம்) தொடர்​பான நம்​பிக்​கையை அடிப்​படை​யாகக்...
பி​ரான்ஸ் நாட்​டின் விமான இன்​ஜின் பழுது​பார்க்​கும் நிறு​வன​மான சஃப்​ரானின் ஆலை ஹைத​ரா​பாத்​தில் நேற்று முன்​தினம் திறக்​கப்​பட்​டது. இந்த ஆலையை பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக தொடங்​கி​வைத்​தார். அப்​போது அவர் பேசும்​போது, “வி​மான போக்​கு​வரத்து துறை​யில் இந்​தியா புதிய பாதை​யில் பயணிக்​கிறது. விமான பராமரிப்​பு, பழுது​ பார்ப்​பு, புதுப்​பித்​தல் துறை​யில் உலகின் மைய​மாக இந்​தியா உரு​வெடுக்க சஃப்​ரான் நிறு​வனம் உறு​துணை​யாக இருக்​கும்” என்று தெரி​வித்​தார். சஃப்​ரான் நிறுவன தலை​வர்...
மத்​திய பிரதேச மாநிலம் தர் மாவட்​டம் லபாரியா கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோவர்​தன்​லால் மாரு (படேல்). இவர் மாநில ஆதி​வாசி ஜதி சேவா சஹா​காரி சமி​தி​யில் மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், வரு​மானத்​துக்கு அதி​க​மாக இவர் சொத்து சேர்த்​துள்​ள​தாக ஏராள​மான புகார்​கள் எழுந்​தன. இதையடுத்து இந்​தூரில் இருந்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நேற்று அதி​காலை 5.30 மணிக்கு திடீரென லபாரியா கிராமத்​துக்கு சென்​றனர். அதி​காரி​கள் 3 பிரி​வாக சென்று கோவர்​தன் லாலின்...
 ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனத்​தின் விக்​ரம் 1 ராக்​கெட்டை பிரதமர் மோடி நேற்று அறி​முகம் செய்​தார். அதோடு ஹைதரா​பாத்​தில் ஸ்கைரூட் நிறு​வனத்​தின் இன்ஃபினிட்டி வளாகத்​தை​யும் பிரதமர் மோடி திறந்து வைத்​தார். இஸ்ரோ நிறு​வனத்​தின் முன்​னாள் விஞ்​ஞானிகள் மற்​றும் ஐஐடி முன்​னாள் மாணவர்​களால் உரு​வாக்​கப்​பட்ட நிறு​வனம் ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ். இது நாட்​டின் முதல் தனி​யார் விண்​வெளி நிறு​வனம். இந்​நிறு​வனம் தயாரித்த விக்​ரம்​-எஸ் என்ற சிறிய ரக ராக்​கெட் கடந்த 2022 நவம்​பர் மாதம்...
ஜம்முவின் ரியாஸியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பதிண்டி பகுதியில் வசித்து வந்தார். சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் ஆன்லைன் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கத்தினருடன் அந்த இளைஞர் மொபைல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. கைதான அந்த இளைஞர் மீது பிஎன்எஸ்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு டெண்டர் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் தெரியவந்தது. இதுவரை இவ்வழக்கில் ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு உதவிய மற்ற பால் நிறுவன அதிகாரிகள் என மொத்தம் 9 பேர்...
 ஹரியானாவில் கூடைப்பந்து கம்பம் சரிந்ததில் தேசிய அளவிலான வீரர் உயிரிழந்தார். ஹரியானாவின் ரோத்தக் நகரை சேர்ந்தவர் ஹர்திக் ரதி (16). தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.இவர் நேற்று முன்தினம் காலையில் தங்கள் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஒருமுறை மேலே எழும்பி கூடையின் விளிம்பை பற்றிய போது, கூடைப்பந்து கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. உடனே அருகில் இருந்த நண்பர்கள் ஹர்திக்கை மீட்டு...