இண்டிகோ விமான சேவை 8-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று வரவேண்டிய 14 விமானங்கள், புறப்பட வேண்டிய 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோன்று விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு செல்ல வேண்டிய 6 இண்டிகோ விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நாடு முழுவதும் கூடுதலாக 100 விமானங்களை...
தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் (முன்பு ஆந்திரா வங்கி) வாங்கிய ரூ.228 கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி, இந்தக் கடனை வாராக் கடனாக வகைப்படுத்தியது. மேலும் இது...
கோவாவின் அர்போரா கிராமத்தில் 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக 3 அதிகாரிகளை கோவா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கியது.
தீ விபத்தை தொடர்ந்து தாய்லாந்து தப்பிச் சென்ற கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா (40),...
நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் இ உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பாவது:
வந்தே மாதரம் பாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் அல்லாவை மட்டுமே வணங்குகிறார்கள். அல்லாவைத் தவிர வேறு யாரையும் எங்கள் வழிபாட்டில் சேர்க்க முடியாது. வந்தே மாதரத்தின் மொழிபெயர்ப்பு ஷிர்க் (பாவம்) தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாகக்...
‘நானும் மேட் இன் இண்டியா’ தான்: பிரான்ஸ் தொழிலதிபரின் பேச்சை கேட்டு பிரதமர் மோடி புன்முறுவல்
admin - 0
பிரான்ஸ் நாட்டின் விமான இன்ஜின் பழுதுபார்க்கும் நிறுவனமான சஃப்ரானின் ஆலை ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “விமான போக்குவரத்து துறையில் இந்தியா புதிய பாதையில் பயணிக்கிறது. விமான பராமரிப்பு, பழுது பார்ப்பு, புதுப்பித்தல் துறையில் உலகின் மையமாக இந்தியா உருவெடுக்க சஃப்ரான் நிறுவனம் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
சஃப்ரான் நிறுவன தலைவர்...
மத்திய பிரதேச மாநிலம் தர் மாவட்டம் லபாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தன்லால் மாரு (படேல்). இவர் மாநில ஆதிவாசி ஜதி சேவா சஹாகாரி சமிதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்துள்ளதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்தூரில் இருந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திடீரென லபாரியா கிராமத்துக்கு சென்றனர். அதிகாரிகள் 3 பிரிவாக சென்று கோவர்தன் லாலின்...
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட்டை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். அதோடு ஹைதராபாத்தில் ஸ்கைரூட் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ். இது நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த விக்ரம்-எஸ் என்ற சிறிய ரக ராக்கெட் கடந்த 2022 நவம்பர் மாதம்...
ஜம்முவின் ரியாஸியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பதிண்டி பகுதியில் வசித்து வந்தார். சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் ஆன்லைன் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கத்தினருடன் அந்த இளைஞர் மொபைல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கைதான அந்த இளைஞர் மீது பிஎன்எஸ்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு டெண்டர் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் தெரியவந்தது.
இதுவரை இவ்வழக்கில் ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு உதவிய மற்ற பால் நிறுவன அதிகாரிகள் என மொத்தம் 9 பேர்...
ஹரியானாவில் கூடைப்பந்து கம்பம் சரிந்ததில் தேசிய அளவிலான வீரர் உயிரிழந்தார்.
ஹரியானாவின் ரோத்தக் நகரை சேர்ந்தவர் ஹர்திக் ரதி (16). தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.இவர் நேற்று முன்தினம் காலையில் தங்கள் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஒருமுறை மேலே எழும்பி கூடையின் விளிம்பை பற்றிய போது, கூடைப்பந்து கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. உடனே அருகில் இருந்த நண்பர்கள் ஹர்திக்கை மீட்டு...
