தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிகாச்சி ஆலையின் துணை தலைவர் எல்.எஸ் கோஹன் உட்பட இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து...
உளவாளியாக செயல்பட ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு
admin - 0
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ், ஊழல் மற்றும் அடிமைத்தனம். இந்த வகைப்படுத்தப்படாத ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு அமைப்பால் (சிஐஏ) வெளியிடப்பட்டது. அதில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.எல்.பகத் தலைமையிலான 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ரஷ்யாவின் உளவாளியாக செயல்பட அந்த நாட்டிடமிருந்து நிதி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, ரஷ்ய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 1,100...
குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. பலாவு நாட்டு கொடியுடன் சென்ற இந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 14 பேர் இருந்தனர்.
இந்த கப்பலின் இன்ஜின் அறையில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து ஓமன் வளைகுடாவில் இருந்த, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபார் போர்க் கப்பலுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டு,...
இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) - நேஷனல் இண்டிகேட்டர் பிரேம்வொர்க் முன்னேற்ற அறிக்கை 2025’ என்பது இந்தியாவின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதாரங்களை வழங்குகிறது.
புள்ளியியல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், வறுமையில் வாடும் அனைத்து வயது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் விகிதம்...
வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
admin - 0
விசா மறுக்கப்பட்டதால் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த, பாகிஸ்தான் தம்பதிதார் பாலைவனத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (17). இவரது மனைவி சாந்திபாய் (15). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானில் ரவிக்குமாருக்கு சரியான வேலை இல்லை. இந்தியாவுக்குச் சென்றால் நல்ல வேலை கிடைத்து மனைவியுடன் சுகமாக வாழலாம்...
பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். எனினும் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் இதயநோய் மருத்துவர் திரேந்திர சிங்கானியா கூறியதாவது: மாரடைப்பு அபாயத்திற்கு ஸ்டீராய்டுகள், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் (குறிப்பாக பெண்களுக்கு) காரணங்களாக உள்ளன. பிரபலமாக இருந்தாலும் சரி,...
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத் நேற்று முன்தினம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
யூ...
மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு
admin - 0
மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங் குணாவத் கூறியதாவது: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பூல்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்சனா பானு என்பவர் கேரளாவுக்கு கடத்திச் சென்றுள்ளார்.
மதமாற்றம் செய்யவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவும்...
மகாராஷ்டிர தொடக்கப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளில் கடந்த ஏப்ரலில் மும்மொழி கொள்கை அமல் செய்யப்பட்டது.
இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 3-வது கட்டாய மொழி பாடமாக இந்தி கற்பிக்கப்படும் என்று...
தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம். சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி,...










