Google search engine
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசுக்கு கட்சி செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் ஆதர​வுடன் வெளிவந்​துள்ள இந்த மசோதா ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது...
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக்...
பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திர பாஜகவின் முன்னாள் தலைவர் புரந்தரேஸ்வரி ஆகியோர் அந்தப் போட்டியில் உள்ளனர். பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின்...
 ஜாம்​பி​யா​வில் நிலத்​துக்கு அடி​யில் இருக்​கும் தாமிரம், கோபால்ட் தாது படிமங்​களை ஆராய புவி​யிய​லா​ளர் குழுவை மத்​திய அரசு அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: எரிசக்தி மாற்​றத்​துக்கு அவசி​ய​மான முக்​கிய கனிமங்​களை பெறு​வதற்​கான முயற்​சிகளை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது. இந்​நிலை​யில் தாமிரம், கோபால்ட் தாது ஆய்வுக்காக இந்​தி​யா​வுக்கு ஜாம்​பியா அரசு இந்த ஆண்டு 9,000 சதுர கி.மீ. (3,475 சதுர மைல்) நிலம் ஒதுக்க ஒப்​புக்​கொண்​டது. மின்​சார வாக​னங்​கள்...
கர்​நாட​கா​வின் மங்​களூருவை சேர்ந்​தவர் பிலால் அகமது டெலி (21). பிளஸ் 2 வரை மட்​டுமே படித்​துள்ள அவர், இணையதள வடிவ​மைப்பு தொடர்​பாக ஓராண்டு டிப்​ளமோ படிப்​பை​யும் நிறைவு செய்​துள்​ளார். இதன்​பிறகு துபாய், பஹ்ரைன் உள்​ளிட்ட நாடு​களில் பணி​யாற்றி உள்​ளார். தற்​போது குஜ​ராத்​தின் சூரத்​தில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் பிலால் பணி​யாற்றி வரு​கிறார். அவரது மாத ஊதி​யம் ரூ.1.25 லட்​சம் ஆகும். கடந்த சில வாரங்​களுக்கு முன்பு மும்​பை​யில் உள்ள ஐஐடி...
மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நரசிங்பூர் எஸ்.பி. மிருககி டேகா கூறுகையில், “இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அபிஷேக் கோஸ்டி என்ற...
டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்​டல் இந்தியா திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் வெற்​றிகர​மாக 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பத்து ஆண்​டு​களுக்கு முன், இந்தியா மிகுந்த நம்​பிக்​கை​யுடன் அறியப்​ப​டாத...
தலைநகர் டெல்​லி​யில் 10 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட டீசல் வாக​னங்​கள், 15 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பெட்​ரோல் வாக​னங்​களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்​கப்​பட​வில்​லை. தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு அதி​க​மாக இருப்​ப​தில் வாகனங்​கள் பெரும் பங்கு வகிக்​கின்​றன. டெல்​லி​யில் காற்று மாசுவை கட்​டுப்​படுத்த பல நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதனால் பழமை​யான வாக​னங்​கள் டெல்​லி​யில் இயக்​கப்​படு​வதை தடுத்து நிறுத்த காற்​றுத் தர மேலாண்மை ஆணை​யம் உத்​தரவு ஒன்றை பிறப்​பித்​தது. 10 ஆண்டு...
 உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக புலந்த்சாஹர் காவல் நிலையத்தில் சித்திக் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சித்திக் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களைக்...
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார். சர்வதேச விமான போக்குவரத்து இயக்க விதிமுறைகளின்படி விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள், விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கையை இந்தியா வெளியிட வேண்டும். வெடி விபத்து உட்பட அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக விமான போக்குவரத்து...