ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில், காட்டு யானைகள் கூட்டம் நேற்று ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பொதுமக்களைத் தாக்கி வரும் யானைக் கூட்டம், வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். அவன்...
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு எடுத்தது. பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டு தெரிவிப்பது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவுக்கு சசி தரூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏஐ-யால் உருவாக்கப்படும் போலி செய்திகள் நல்லதல்ல. அந்த வீடியோவில் வருவது...
கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை நல்கூரில் உள்ள தேனீ வளர்ப்பு பண்ணைக்கு ஆய்வுப் பணிக்காக சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு திறந்த வாகனத்தில் ஏறி, நின்றவாறு சென்ற...
ம.பி.யின் காண்டவா நகரின் போலீஸ் லைன் பகுதியில் காவல் துறையினரின் வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி இரவு இரு காவலர்களின் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் திருடுபோனது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அலிராஜ்பூரில் போலீஸ்காரர்...
வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இவர்களை திருப்பி அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு ஊடுருவல் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. எஸ்ஐஆர் பணியின் போது ஊடுருவல்காரர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களது பெயர் நீக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்தின் சசார் மாவட்டத்தில் உள்ள நதன்பூர் கிராமத்துக்கு அமைச்சர் அமித் ஷா...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 12-ம் நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு தொடர்பு இருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
அகமதாபாத் விபத்து: விமானி திட்டமிட்டே எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியதாக இத்தாலி பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
admin - 0
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. விமானி திட்டமிட்டு இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியுள்ளார் என்று இத்தாலிய பத்திரிகையில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் கொரியர் டெல்லா செரா நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்த...
பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பும் ஏற்படவில்லை.
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தொழிற் சங்கங்களின் வேலை...
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் உரையாற்றினார்.
அதைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ”நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தாண்டு பட்ஜெட் எவ்வாறு தனது பங்களிப்பை அளிக்கும் என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக விளக்கினார்.
விரைவான சீர்திருத்தங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு, திறன்மேம்பாடு, அடுத்த தலைமுறை கட்டமைபுக்கான நடவடிக்கைகள், சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான முயற்சிகள், கல்வி...
நடாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செவ்வாய்க் கிழமை நோட்டீஸ் வழங்கின. அதில் சில பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நோட்டீஸ் நிராகரிக்கப் பட்டிருக்கலாம்.
இருப்பினும், அந்தப் பிழைகளைச் சரி...








