Google search engine

அருமனை:  போலீஸ் மாயம்; 10 நாட்களுக்கு மேல் ஆனதால் மர்மம்

குழித்துறை பகுதியைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47), கடந்த 30ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அருமனை போலீஸ் குடியிருப்பில் அவரது செல்போனும் பைக்கும் கிடந்தன. இது குறித்து அவரது மனைவி சிமி அருமனை போலீசில் புகார் அளித்துள்ளார்....

புதுக்கடை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குன்னத்தூர், மாத்திவிளையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோகுல் குமார் (28) என்பவர், தனது வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுவிளை பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று மாலை 7 மணி அளவில்...

கொல்லங்கோடு: வளர்ச்சி பணிகளை துவக்கிய எம்எல்ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில், வார்டு 3-ல் சவரிகுளம் சாலை மற்றும் வார்டு 6-ல் சித்திரவிளை-ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைக்கவும், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்கவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து மொத்தம்...

குமரி: பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் இலவச வேஷ்டி சேலைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கி வருகிறது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் வேஷ்டிகள் தயாரிக்கப்பட்டு, தற்போது பார்சல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு...

திருவிதாங்கோடு:   ஜமா- அத் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜமாஅத் செயலாளர் சையது முகமது அஸ்லாம் (46) என்பவரை, நிலத்தகராறு காரணமாக ஷேக் முகமது (58) என்பவர் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஜமாஅத்துக்கு சொந்தமான நிலத்தை ஷேக் முகமது விற்பனை செய்ததாகவும், அதை மீட்க நிர்வாகிகள் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தின்...

அருமனை: பணிக்குச் சென்ற  காவல் எஸ்எஸ்ஐ மாயம்

குழித்துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47) கடந்த 31ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சிமி (45) தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் லட்சுமணன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அருமனை...

மீனச்சல்: ஶ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில் அஷ்டமி ரோகிணி திருவிழா

களியக்காவிளை அருகே மீனச்சலில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் இந்த ஆண்டு அஷ்டமி ரோகிணி திருவிழா இன்று, 10-ம் தேதி, காலை மஹா கணபதி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. நாளை மஹா மிருத்யுஞ்சய ஹோமம், நாராயணிய பாராயணம் மற்றும் சமய கருத்துரை நடைபெறும். நிறைவு நாளான...

விரிகோடு: ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு ; மக்கள் எதிர்ப்பு

கிள்ளியூர், விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய பாதைக்கு பதிலாக மாற்றுப் பாதையில் அமைக்க அரசாணை பிறப்பித்ததை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி பமலா தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்...

கொல்லங்கோடு: கல்லூரி மாணவி மீது கழிவு நீர் ஊற்றிய தம்பதி

நித்திரவிளை பகுதியை சேர்ந்த பிரைட் என்பவர் செங்கவிளை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவரது மகள் அபினயா (20) கல்லூரி மாணவி. கடந்த 7ஆம் தேதி, ஹோட்டல் முன்பக்கம் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, இடத்தின் உரிமையாளர் சுனில் குமார் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோர் தகாத வார்த்தை...

நித்திரவிளை: சாலையில் தடுமாறி விழுந்த மீனவர் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்த 65 வயது மீன்பிடி தொழிலாளி வர்கீஸ், நேற்று முன்தினம் இரவு சின்னத்துறை சாலையில் நடந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்...