குளச்சல்: வாக்காளர் சேர்க்கை முகாம் கலெக்டர் பங்கேற்பு
2004 சுனாமி தாக்குதலுக்குப் பிறகு குமரி கடலோர மீனவ கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு முகாம் குளச்சல் மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் குளச்சல் தொகுதி வாக்காளர்...
திருவட்டாறு: தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பிரதோஷ விழா
திருவட்டாறு தளியல் ஜடாதீஷ்வரர் கோவிலில் நேற்று இரவு (ஜனவரி 1) பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்தீஷ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு சிவபெருமானை துதித்து பாடல்கள் பாடினர். சிவபெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார...
திருவட்டாறு: ஆதிகேசவன் திருக்கோவில் சார்பில் மகாதீப ஆரத்தி
திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் புண்ணிய தீர்த்தங்கள் பராமரிப்பு பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், ரோகிணி நட்சத்திரத்தையொட்டி பரளியாற்றில் மகா தீப ஆரத்தி நேற்று இரவு நடைபெற்றது. பாபு தலைமை வகிக்க, அகில பாரதிய சன்னியாசிகள் புரவலர் குழு தலைவர் காமராஜ் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில்...
திக்குறிச்சி: மஹாதேவர் ஆலயத்தில் நந்தி ஊட்டு பூஜை
குமரியில் ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு அரிசிமாவு, பூக்கள், கரும்பு, வாழை, மாம்பழம், ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்களால் பிரமாண்ட படையலிட்டு நந்தி ஊட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மஹா தேவர்...
நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
குமரி மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஐடன் சோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்....
மணவாளக்குறிச்சி: தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜன் (37) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அஜித், ஷாலினி, அமுதா ஆகிய மூவர் பாதையில் ஸ்கூட்டர் நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்கியுள்ளனர். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜனுக்கும்...
குமரி: மாடு மீது பைக் மோதல் மாவட்ட ஜனதாதள தலைவர் படுகாயம்
அருமனை பகுதியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் குமரி மாவட்ட தலைவர் ஜான் கிறிஸ்டோபர் (54) மற்றும் அவரது நண்பர் ஷஜி குமார் ஆகியோர் நேற்று உண்ணாமலை கடை பகுதியில் பைக்கில் சென்றபோது, சாலை நடுவில் நின்ற பசுமாட்டின் மீது மோதி படுகாயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில்...
வாவறை: ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு விழா – பரிசு வழங்கல்
வாவறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் 22வது ஆண்டு விழா மார்க்சிஸ்ட் நிர்வாகி செல்லசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாநில ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற ஜோஸ்னா, மாநில...
குமரி: கேரளாவுக்கு எம் சாண்ட் கடத்தியவர் லாரியுடன் கைது
செங்கவிளை 4 வழிச்சாலை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார், முறையான ஆவணங்கள் இன்றி எம் சாண்ட் ஏற்றிச் சென்ற கேரள மாநில லாரியை சோதனை செய்தனர். லாரியில் ஆவணங்கள் இல்லாததால், லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்....
பொன்னப்ப நாடார் திருவருவ சிலை நிறுவும் பணி ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு ஜங்சனில் உள்ள சர். சி. பி. இராமசாமி ஐயர் நினைவு பூங்காவில், தமிழக அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கப்படுகிறது. நேற்று, 6 அடி உயரச் சிலை மண்டபத்தின் நடுவில் நிறுவும் பணி...













