இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அறிவித்துள்ளது. இரு நாடுகளிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது இருக்கும்.
மேலும் இந்தத் தொடர் மார்ச்சில் நிறைவடையும். வரும் ஆகஸ்டில் வங்க தேசத்துடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், அக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகளிலும், டிசம்பர் முதல் 2027 ஜனவரி வரை நியூஸிலாந்துடன்...
எதிரிகளின் கப்பல்களை தவிர மற்ற அனைத்தும் ஹார்முஸ் வழியாக செல்லலாம்: ட்ரம்ப் கெடுவுக்கு ஈரான் பதில்
admin - 0
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஐ.நா.வின் ஈரான் பிரதிநிதி தெரிவித்தார்.
முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் இந்த ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படாவிட்டால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார்....
‘‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும்’’ என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் கெடு விதித்திருந்தார். அதற்கு...
கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படையின் அதி நவீன எப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் கூறியது. இந்த விமானம் அமெரிக்க விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஹார்முஸ் தீவு அருகே எதிரி நாட்டின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு...
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உருக்குலைந்த தலைமையகத்திற்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத் தகராறு காரணமா ?: இந்தக் கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இது சொந்த குடும்பத்...
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அணுசக்தி மையம் அமைந்துள்ள இந்தப் பகுதியில், முதல் முறையாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவித் தாக்கியுள்ளன. ஈரானின் பழைய ஏவுகணைகளிடமிருந்து அணுசக்தி நகரைக் காக்கத் தவறியதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது....
ஈரான் போருக்கு கூடுதலாக 200 பில்லியன் டாலர் (ரூ.18 லட்சம் கோடி) தேவை என அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் போர்தொடுத்தன. இதற்காக மிகப் பெரிய படையை அமெரிக்கா அனுப்பியது. ஈரான் மீதான தாக்குதல் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. ஈரானில் ஏராளமான இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத் தலைமையகம் ஈரான்...
நியூயார்க்கிலுள்ள ஒரு சிறை வளாகத்தில் கத்திகள், செல்போன், ஹேர்கிளிப்புகளை ட்ரோன் வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மார்சி டவுன் பகுதியில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த ஒரு ட்ரோன் கத்திகள், செல்போன், ஹேர்கிளிப்புகள், தலையில் அணியும் துணி ஆகியவை அடங்கிய பையை வீசிச் சென்றுவிட்டது.
இதைப் பார்த்த சிறை அதிகாரிகள் செல்போன், ஹேர்கிளிப்புகள் அடங்கிய பையை எடுத்து சோதனை செய்தனர்....
எண்ணெய் வயல்கள், காஸ் நிலையங்கள் மீது தாக்குதல்: ஈரானின் பதிலடியும், ட்ரம்ப் கொந்தளிப்பும்
admin - 0
கத்தாரைத் தாக்கினால் ஈரான் பேரழிவைச் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் போர் உச்ச கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு ராணுவ மோதலாக...
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை...










