சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை உள்ள நிலையில், இந்தியாவுடனான ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய பயணத்துக்கு முன்பாக டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய தகாய்ச்சி, “சர்வதேச சூழலில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை விழுமியங்களையும் நட்புறவின் நலன்களையும் பகிர்ந்துகொள்ளும் இந்தியா உடனான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சர்வதேச நிலையை...
“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இந்தியாவுடன் கூட்டாளியாகச் செயல்பட விரும்புகிறோம்.” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், "இந்தியாவுடன் மற்றொரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிலைக்கு மிக அருகில் வந்துள்ளோம். இந்த...
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 1,500 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பாடமும் உணர்த்தப்பட்டிருக்கிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஜூன் 24 அன்று மாலை சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. 7.1 ரிக்டர் அளவு கொண்ட முதல் நிலநடுக்கம், தலைநகர் கராகாஸிலிருந்து மேற்கே 168 கிலோமீட்டர் தொலைவில், 22 கிலோமீட்டர் ஆழத்தில்...
பணமோசடி தடுப்பு மற்றும் தீவிரவாத நிதியுதவி தடுப்பு (ஏஎம்எல்/சிடிஎப்) அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வருகிறது.
இந்த கண்காணிப்பு அமைப்பின் நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டம் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது. இதில், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை ‘சாம்பல் பட்டியலில்' (Grey List) சேர்ப்பது மற்றும் ஏற்கெனவே இப்பட்டியலில் உள்ள நாடுகளை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் விடுவிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் ஏற்கெனவே...
பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்த ட்ரம்பின் உத்தரவை நிராகரித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்
admin - 0
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தானியங்கி பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்தக் கோரி அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின்படி, 1868-ம் ஆண்டு முதல் அந்நாட்டு மண்ணில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி அமைக்கும் நோக்கில், அதிபர் டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார்.
தற்போதைய குடியுரிமை கொள்கையை...
வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்கு பின் தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது மீட்பு பணியில் சற்று நம்பிக்கை தந்துள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தில் வெனிசுலா அமைந்துள்ளது. அந்த நாட்டின் யாராகுய் மாகாணம், சான்பெலிப் நகரில் கடந்த புதன்கிழமை மாலை 6 மணி அளவில் (இந்திய...
சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவுதி அரசின் அராம்கோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹார்முஸ் ஜல சந்தியின் மேற்கு கடலோர பகுதியான ராஸ் தனுரா என்ற பகுதியில் அமைந்துள்ளன. ஈரான் போர்...
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரின் இந்திய பயணம் கைகூடும் என நாங்கள் நம்புகிறோம். நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, அமெரிக்க தேசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் உள்ளது.
பிரதமருக்கும், அதிபருக்கும் இடையிலான நட்பு மிகவும் நெருக்கமானது. இது அரசாங்க...
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருப்பது பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நட்பு என்று ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி நன்றி...
ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் வீசி வரும் இந்த அதீத வெப்பத்தின் காரணமாக ஐரோப்பா முழுவதும் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பிரான்சில் மட்டும், வெப்பம் உச்சத்தில் இருந்த மூன்று நாட்களில் வழக்கமான மரணங்களை விட 1,000 கூடுதல்...









