Google search engine
அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் உள்ள ராணுவ தளத்​தின் மீது மர்ம ட்ரோன்​கள் பறந்​த​தால் பதற்றம் எழுந்திருக்கிறது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக அங்கு வசிக்​கும் பாது​காப்​பு, வெளி​யுறவு அமைச்​சர்​களை இடமாற்​றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்​கிறது. அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் போர்ட் லெஸ்லி ஜே. மெக்​நேயர் என்ற ராணுவ தளம் அமைந்​துள்​ளது. இந்த மையம் அமெரிக்​கா​வின் முக்​கிய ஆயுதக் கிடங்​கு​களில் ஒன்​றாக​வும் விளங்​கு​கிறது. அமெரிக்க பாது​காப்​புத் துறை அமைச்​சர் பீட் ஹெக்​செத், வெளி​யுறவு அமைச்​சர்...
இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்​ரெசா சுலை​மானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான். செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப்...
வட கொரியாவை இந்த பூவுலகின் மர்ம தேசம் என்று சொல்லலாம். அங்கு என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எல்லாமே வெளியுலகுக்கு ரகசியம்தான். உலகமே கோவிட் பெருந்தொற்றில் சிக்கி மரணக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோதும் கூட, உயிரிழப்புகள் பற்றி அங்கிருந்து ஒற்றைச் செய்திகூட பதிவாகவில்லை. ராணுவ கட்டுக்கோப்பு என்பதன் உண்மையான அடையாளமே வட கொரியாதான் எனலாம். அந்த அளவுக்கு மக்கள் ‘உம்’ என்றாலும், ‘இம்’ என்றாலும்...
இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உளவுத்​துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​துள்​ளார். மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்​கர் பஸ்​டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகளுக்​கும், ஈரானுக்​கும் இடை​யில் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதனால், வளை​குடா நாடு​களிடையே பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில்...
அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி​யாக வளை​குடா நாடு​களில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்​கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்​குதல் நடத்தி வருகின்​றன. இதனைத் தொடர்ந்​து, ஈரானுக்கு ஆதர​வாக ஏமனில் உள்ள ஹவுதி​கள் மற்​றும் லெப​னானின் ஹிஸ்​புல்லா தீவிர​வாத அமைப்பு​கள் இஸ்​ரேலுக்கு எதி​ரான தாக்​குதலை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து லெப​னான் மீது இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதல்​களில் 900-க்​கும் அதி​க​மான நபர்​கள் உயிரிழந்​தனர். இந்​நிலை​யில் லெப​னான் தலைநகர் பெய்​ரூட்​டிலுள்ள கட்​டிடம்...
 ஈரான் போர் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் ரூவேன் அசார் இதை கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இது தொடர்பாக முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரூவேன் அசார் கூறியதாவது: “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் அது அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக ஈரானின்...
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி, தங்களது ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (மார்ச் 17) தெரிவித்தார். ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு செயலாளர் லாரிஜானி உயிரிழந்தது குறித்த தகவல் தனக்கு கிடைத்துள்ளதாக காட்ஸ்...
ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்பு மொஜ்தபா காமேனியும் அவருடன்தான் இருந்தார் என்றும், தாக்குதலுக்கு சில நொடிகள் முன்புதான் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கின. முதல் தாக்குதலே, உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியையும், ராணுவத் தளபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் குறிவைத்து...
ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுவதால், அதை கைப்பற்றும் நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களின் போக்கு வரத்துக்கு ஈரான் கடும் நிபந்தனை விதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள போர்க் கப்பல்களை அனுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் நேட்டோ நாடுகள்...
 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் சீன் பென் வென்றார். இருப்பினும் அந்த விழாவை தவிர்த்துவிட்டு ரஷ்ய படையெடுப்பால் போர் சூழல் நிலவும் உக்ரைனுக்கு அவர் சென்றார். அது இப்போது பேசு பொருளாகி உள்ளது. 65 வயதான நடிகர் சீன் பென், ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இந்திய நேரப்படி அமெரிக்காவின் லாஸ்...