Google search engine
ஈ​ரான்​-அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்​களுக்கு நிறுத்தப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்​தார். இந்​நிலை​யில் இந்​தி​யத் தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்​தி​யத் தூதரகத்தை தொடர்​பு​கொண்​டு, அவர்​கள் பரிந்​துரைக்​கும் வழித்​தடங்​களை பயன்​படுத்தி ஈரானிலிருந்து வெளி​யேற வேண்​டும். இதன்​மூலம் அவர்கள் பாது​காப்​பாக வெளி​யேற முடி​யும். அதே​நேரத்​தில் தூதரக அதி​காரி​களை கலந்து ஆலோசிக்காமல் சர்​வ​தேச தரை வழி எல்​லையை கடந்து செல்​லும் முயற்​சி​யில்...
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” என்று ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், “இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. இது நிகழ வேண்டும் என நான்...
ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு...
வரும் காலத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்கை​களில் இந்​தியா ஈடு​பட்​டால் அதற்​குப் பதிலடியாக கொல்​கத்தா மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று அந்​நாட்டு பாதுகாப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் சில தினங்​களுக்கு முன்பு எச்சரித்​திருந்​தார். இதற்கு பதிலடி தரும் வகை​யில், மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் அளித்த பேட்​டி​யில் கூறும்​போது, “பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் ஆத்​திரமூட்​டும் வகையி​லான இந்த அறிக்​கையை வெளி​யிட்​டிருக்​கக் கூடாது. 55 ஆண்​டு​களுக்கு முன்பு பாகிஸ்​தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்​த​போது...
பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்-டவுன் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்க்கெட்களை இரவு 8 மணிக்குள்ளும் ஓட்டல்களை இரவு 10 மணிக்குள்ளும் மூடவேண்டும் என்று பாகிஸ்தானில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சர்வதேச நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானில் கடந்த...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டு கால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்”...
அமெரிக்காவும் ஈரானும் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கப் போவதில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள், உடனடி போர்நிறுத்தம் மற்றும் அதனை தொடர்ந்து...
மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சூழலில், அண்டை நாடுகளுடனான நில எல்லைகள் வழியாக இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போர் அபாயம் காரணமாக, ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்தியத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள...
அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரை நிறுத்த வரைவு திட்​டம் தயாரிக்​கப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக 45 நாட்​கள் போர் நிறுத்​தத்தை அமல் செய்ய வேண்​டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடி​யாக திறக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் வரைவு திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படை மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஈரானில் இது​வரை 2,100-க்​கும் மேற்​பட்​டோர்...
ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளை​குடா நாடு​களில் கதிரியக்க பாதிப்பு ஏற்​படும் என சர்​வ​தேச அணுசக்தி முகமை நிபுணர்​கள் கவலை தெரி​வித்​துள்​னர். ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் கூட்​டுப்​படை தொடர் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஈரானின் புஷர் அணுமின் நிலை​யம் அருகே கடந்த சனிக்​கிழமை குண்டு வீசப்​பட்​டது. இது அணு மின்​நிலை​யத்​திலிருந்து 350 மீட்​டர் தொலை​வில் விழுந்து வெடித்​தது. இங்கு நடத்​தப்​படும் தொடர் தாக்​குதலால், ஈரான் தலைநகர்...