ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு, அவர்கள் பரிந்துரைக்கும் வழித்தடங்களை பயன்படுத்தி ஈரானிலிருந்து வெளியேற வேண்டும். இதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும்.
அதேநேரத்தில் தூதரக அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் சர்வதேச தரை வழி எல்லையை கடந்து செல்லும் முயற்சியில்...
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” என்று ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், “இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. இது நிகழ வேண்டும் என நான்...
ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு...
வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால் பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை
admin - 0
வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறும்போது, “பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆத்திரமூட்டும் வகையிலான இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கக் கூடாது.
55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்தபோது...
பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்-டவுன் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்க்கெட்களை இரவு 8 மணிக்குள்ளும் ஓட்டல்களை இரவு 10 மணிக்குள்ளும் மூடவேண்டும் என்று பாகிஸ்தானில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சர்வதேச நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தானில் கடந்த...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
“ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டு கால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்”...
அமெரிக்காவும் ஈரானும் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கப் போவதில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள், உடனடி போர்நிறுத்தம் மற்றும் அதனை தொடர்ந்து...
மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சூழலில், அண்டை நாடுகளுடனான நில எல்லைகள் வழியாக இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் அபாயம் காரணமாக, ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்தியத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள...
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரை நிறுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 45 நாட்கள் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரைவு திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படை மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஈரானில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர்...
ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால் வளைகுடா நாடுகளுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும்: சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை
admin - 0
ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்னர்.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் புஷர் அணுமின் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை குண்டு வீசப்பட்டது. இது அணு மின்நிலையத்திலிருந்து 350 மீட்டர் தொலைவில் விழுந்து வெடித்தது. இங்கு நடத்தப்படும் தொடர் தாக்குதலால், ஈரான் தலைநகர்...










