Google search engine
ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலரை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த போரில் இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவில் உள்ள குடும்பத்தை சேர்ந்த திவ்யா என்பவர்...
ஈ​ரான் மீதான போர் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தொடங்​கிய​திலிருந்​து, சர்​வ​தேச நிதிச் சந்​தைகளில் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் சில மர்​ம​மான வர்த்​தகங்​கள் அரங்​கேறி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. குறிப்​பாக, அமெரிக்க அரசின் முக்​கிய​மான கொள்கை முடிவு​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படு​வதற்கு சில நிமிடங்​களுக்கு முன்​ன​தாகவே, சந்​தை​யில் பெரும் முதலீடு​கள் செய்​யப்​படும் போக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. வெனிசுலா மீதான தாக்​குதல், ஈரான் மீதான தாக்​குதல், அமெரிக்​க-ஈ​ரான் போர் நிறுத்த அறி​விப்பு உள்​ளிட்ட நிகழ்​வு​களுக்கு சில...
“ஒரு முழுமையான, இறுதியான உடன்பாடு எட்டப்படும் வரை அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலை கொண்டிருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பதிவில், “ஏற்கெனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை கொன்று குவிப்பதற்கும் அழிப்பதற்கும் அவசியமான அமெரிக்காவின் அனைத்து போர்...
ஹார்முஸ் ஜலசந்தியின் பிரதானப் கப்பல் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகள் இருக்கும் ஆபத்தைக் காரணம் காட்டி, ஹார்முஸ் வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை ஈரான் ராணுவம் அறிவித்தது. கடல் கண்ணிவெடிகளின் அபாயம் காரணமாக கப்பல்கள் பிரதான வழித்தடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கினை வகிக்கும் மிக முக்கிய நீர்வழிப்...
“நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அதனை இஸ்ரேல் ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது சண்டையிட்டோ அடையும்” என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலியர்களின் மன உறுதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் அற்புதமான மக்களே, உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான தங்குமிடங்களில் நீங்கள் மன உறுதியைக்...
ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் கடல் கண்​ணிவெடிகளைப் பதித்திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்​நாட்டு செய்தி நிறு​வனங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. இது அப்​பி​ராந்​தி​யத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஈரானின் புரட்​சிகர காவல்​படை​யுடன் நெருங்​கிய தொடர்புடைய ‘இஸ்​னா’ மற்​றும் ‘தஸ்​னிம்’ ஆகிய செய்தி நிறு​வனங்​கள் கடல் கண்​ணிவெடிகள் தொடர்​பான வரைபடத்தை நேற்று வெளி​யிட்​டன. பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவுப்...
ஈ​ரானும், அமெரிக்கா​வும் போர் நிறுத்​தத்தை அறி​வித்​த​பின், லெபனான் மீது இஸ்​ரேல் நேற்று முன்தினம் 100 ஏவு​கணை​களை ஏவி 254 பேரை கொன்​றது. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மீது ஈரான் ஏவு​கணை தாக்குதல் நடத்தி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடியுள்​ளது. இதனால் சண்டை நிறுத்​தத்​தில் குழப்​ப​மான சூழல் நில​வு​கிறது. போர் காரண​மாக மூடப்​பட்ட ஹார்​முஸ் ஜலசந்​தியை சர்வ​தேச கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்​கள்...
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போர், இன்று முதல் இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து, இந்த போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும்...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா...
ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இதனால், இரு தரப்​புக்​கும் இடையே இடைக்​கால போர் நிறுத்​தம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த போர் நிறுத்​தத்​துக்கு இந்​தி​யா, உள்​ளிட்ட பல்​வேறு நாடு​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன. அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​திவரும் நிலை​யில், தனது கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் உலகின்...