சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மார்ச் 14-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 15-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 24-ம் தேதியிலிருந்து துறை தோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை துரைமுருகன் முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.