கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்த ஜோஸ்லால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் மனுவை நிராகரிக்க தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். கட்சியின் ஒழுங்குமுறைக்கு எதிரானது எனக் கருதி, மாநில தலைமை ஜோஸ்லாலை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.














