மார்த்தாண்டம், பயணம் பகுதியைச் சேர்ந்த லதா (50) என்பவர் தனது மகனுடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்து சுயநினைவை இழந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். மருத்துவர்களின் அறிவுரைப்படி, உறவினர்களின் சம்மதத்துடன் லதாவின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், தோல் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டு உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.














