சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்? என்று தெரியுமா? பெரும்பாலானோர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறுவார்கள். ஆனால் அது தவறு.
சச்சின் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி சுமார் 24 வருடங்கள் விளையாடினார். 200 டெஸ்டில் விளையாடி 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 463 ஆட்டங்களில் விளையாடி 49 சதங்கள், 96 அரை...
30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதியது.
இதில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் மோனிஷா (39 மற்றும் 60-வது நிமிடம்) அடித்து...
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு தொடக்க...
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்கிறது.
ராஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போடடியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆசிப் ஷேக் 47...
இந்தியா யு-19 – ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா யு-19 அணி 91.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஹாகன் 246 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 92 ரன் கள் சேர்த்தார்.
பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 16.2 ஓவர்களை வீசி 45...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி 20 (ஐஎல்டி20) தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இலங்கை வீரர் குஷால் மெண்டிஸுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். அதேவேளையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி...
‘பாகிஸ்தான் அணியின் ரசிகராக இருப்பது எளிய காரியம் அல்ல” – பாக். கிரிக்கெட் ரசிகர்கள் விரக்தி
admin - 0
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை அடுத்து அந்நாட்டு மக்கள் அந்த அணி மற்றும் அதன் வீரர்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள். பத்திரிகையாளர்கள், மக்கள் என பலரும் தங்கள் அணியை விமர்சித்துள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான்...
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே இருந்தனர். சுமார் 90 நிமிடங்கள் கழித்தே பரிசளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்திய வீரர்கள் சிலரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா,...
13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.
12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இந்தியாவில் 4...









