Google search engine
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி கூறி​னார். சிதம்​பரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி​குறைப்பு மாபெரும் புரட்சி என்​றும், ஆண்​டுக்கு ரூ.2.50 லட்​சம் கோடி மீத​மாகும் என்​றும் பிரதமர் தெரி​வித்​துள்​ளார். ஆனால், கடந்த 8 ஆண்​டு​களில் 4 வகை​யான உயர்ந்த வரி​களை விதித்து ரூ.55 லட்​சம் கோடியை மக்​களிட​மிருந்து...
சிறுநீரக திருட்டு வழக்கை விசா​ரிக்க சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தும், விசா​ரணை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்லை என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற சிறுநீரகம் மற்​றும் உடல் உறுப்​பு​கள் திருட்டு தொடர்​பாக...
திருப்​பூர் மாவட்​டம் உடுமலை​யில் உள்ள கறிக்​கோழி நிறு​வனத்​தில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் 3-வது நாளாக நேற்​றும் சோதனை மேற்​கொண்​டனர். உடுமலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​துக்கு பல மாநிலங்​களில் கிளை அலு​வல​கங்​கள் உள்​ளன. கடந்த 23-ம் தேதி உடுமலை​யில் உள்ள அலு​வல​கம், தீவன உற்​பத்தி ஆலை, கணப​தி​பாளை​யத்​தில் உள்ள இல்​லம் ஆகிய​வற்​றில் 20-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரி துறை அதி​காரி​கள் அடங்​கிய குழு​வினர் ஆய்​வைத் தொடங்​கினர். இந்​நிலை​யில், 3-வது...
“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான் கழக கண்மணிகளுக்கு இப்படி கண்டிப்பு மணி அடித்திருக்கிறார். ‘வெல்​வோம் 200... படைப்​போம் வரலாறு’ என சூளுரைத்​துக் கிளம்பி இருக்​கும் திமுக, தேர்​தல் ஓட்​டப் பந்​த​யத்​தில் மற்ற கட்​சிகளை​விட...
போலி வாக்​குறு​தி​கள் கொடுத்து மக்​களை ஏமாற்​றிய​தாக திமுக ஆட்​சியை கண்​டித்து சட்​டப்​பேரவை தொகு​தி​வாரி​யாக 2 மாதம் தொடர் ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்​தப்​போவ​தாக தமிழக பாஜக தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக சிறு​பான்மை பிரிவு தேசிய செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம் மற்​றும் தமிழக பாஜக செய​லா​ளர் வினோஜ் பி.செல்​வம் ஆகியோர் கூறிய​தாவது: கடந்த 4 ஆண்​டு​களில் தமிழக மக்​களை எண்​ணற்ற இன்​னல்​களுக்கு உள்​ளாக்​கியதோடு மட்​டுமல்​லாமல், மீண்​டும் கவர்ச்சிகர​மான போலி வாக்​குறு​தி​கள், வாக்​காளர்​களுக்கு பணத்தை வாரி...
அமைச்​சர் துரை​முரு​கன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​ வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உச்ச நீதி​மன்​றம், இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் தமிழக அரசு பதில் அளிக்​க​வும் உத்தரவிட்டுள்​ளது. தமிழக நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் பொதுப்​பணித் துறை அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது, 2007-09 கால​கட்​டத்​தில் வரு​மானத்​துக்குஅதி​க​மாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக துரை​முரு​கன், அவரது மனைவி...
திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் புதை சாக்கடை குழாயின் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அடைப்பை அப்புறப்படுத்துவதற்காக மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களான கள்ளக்குறிச்சி...
துறையூர் அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து இளைநிலைப் பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 34 பேர் படித்து வருகின்றனர். 2 வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதனிடையே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்...
நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பள்ளி வாசல் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. செப்பு பட்டயம் அடிப்படையில் 2.34 ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிவாசலுக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு கண்டியப்பேரி கான்மியா பள்ளிவாசல் உரிமை கோரிய வழக்கில் பள்ளிவாசல் முத்தவல்லிக்கு...
நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்கு சாலையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம் என, மேடையில் மேயர் மகேஷ் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே கடந்த 20-ம் தேதி மாலை ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். கூட்டம் நடைபெற்ற அண்ணா விளையாட்டரங்கம் முன்னால் போக்குவரத்து...