சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு செல்லும் வழித்தடத்தில் நேற்று காலை 6 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அதாவது ஆலந்தூர் - விமான நிலையம் இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு நேரடியாக மெட்ரோ ரயில் சேவை இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தற்காலிகமாக சேவை ரத்தானதால் பயணிகள் ஆலந்தூரில்...
பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மண்டல உதவி ஆணையர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையின் முக்கிய சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், நீர்நிலைகள், திறந்த வெளிகள் மற்றும் காலி இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மாநகராட்சி கவனத்துக்கு வந்துள்ளது.
இத்தகைய செயல்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் காற்று...
நீதிமன்ற உத்தரவுப்படி, பாரிமுனையில் 500-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பூக்கடை, பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் அரசு பேருந்துகள், கார் உள்பட அனைத்து விதமான வாகனங்களும் செல்வதில் சிரமம் இருந்தது. இதனால், எப்போதும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு...
புத்தாண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து 570 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச.30 மற்றும் 31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி...
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், மறுநாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20...
பணியின்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. சில ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்குவது பொதுமக்களின் புகார் மற்றும் பேருந்தின் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்படுகிறது.
இவ்வாறு ஓட்டுநர்கள்...
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிசாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில், திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில், வீரகநல்லூரில் பழனிசாமி பேசியதாவது: நான் எழுச்சி...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 மற்றும் டிரையத்லான் சென்னை - 2026 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதல் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சர்வதேச இளையோர் பாய்மர படகுப் போட்டி சாம்பியன்ஷிப் 2026 போட்டியையொட்டி, சென்னையில் ஜன.6-ம் தேதி முதல் 9-ம் தேதி...
குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி ஆட்சி அமைக்கும். எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று டிடிவி.
தினகரன் கூறுகிறார். நாங்கள் யாரையும் மிரட்டி, கூட்டணியில் சேர்க்கவில்லை. விஜய்யை மட்டுமல்ல, எந்த தனி நபரையும் விமர்சனம்...
தவெக கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.29) நடைபெற உள்ள விசாரணைக்கு ஆஜராக கரூர் ஆட்சியருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.29) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர்...
