சென்னை மாநகராட்சியில் சட்ட விதிப்படி சொத்து கணக்கை மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் அளிக்கவில்லை
admin - 0
மாநகராட்சியில் மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் சட்ட விதிகளின்படி சொத்துக் கணக்கை அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 34ஏ என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது.
அதில், ``நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், துணை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் சொத்துக்...
கிராமங்கள், நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அண்ணாமலையின் `வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்களை அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.
10 நாட்களில் 40 லட்சம் உறுப்பினர்களை இயக்கத்தில் இணைக்க தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி `வீ த லீடர்ஸ்' என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து, தமிழக பாஜகவில் முக்கியப் பொறுப்புகளில் வகித்து...
மதுபானக் கடைகளில் கூடுதலாக ரூ.10 வாங்குவது வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள் நிறுத்தப்படும் என அமைச்சர் க.விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் என்னை திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்துள்ளார். முறைகேடுகளுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது வரும் பேரவை கூட்டத் தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும். எம்ஆர்பி விலைக்குள் மதுபானம் கொண்டு வரப்படும். எந்த...
ராமேசுவரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்துக்கு இதுவரை 2 கோடி பார்வையாளர்களுக்கு மேல் வந்து சென்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக் காலத்துக்கு பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள...
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக 204 பேருக்கு பதவி கேட்கும் காங்கிரஸ்
admin - 0
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 204 பேரை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு அக்கட்சி கடிதம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து...
மேயர் – எம்எல்ஏ இடையே ‘மெழுகுவர்த்தி’ சர்ச்சை: பள்ளி கட்டிட திறப்பு விழாக்களில் அடுத்தடுத்து பரபரப்பு
admin - 0
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பள்ளி கட்டிடத் திறப்பு விழாக்களில், மேயர் ஆர்.பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வெளிப்படையான மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மேயர் ஆர்.பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி மற்றும் கல்வித்துறை இணை...
விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று தனது பணியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம். முதல்வரைச் சந்தித்து விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வைப்பேன்.
‘மதுக்கடையை மூடிவிட்டோம்’ என்றார்கள். ‘விருத்தாசலத்தில் ஒரு கடையும் மூடப்படவில்லை’ என மக்கள் தெரிவிக்கின்றனர். எல்லாம் கண்துடைப்பாக உள்ளது.
பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர்....
குர்பானி கொடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஐயூஎம்எல் வலியுறுத்தல்
admin - 0
குர்பானி கொடுக்க கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று, முதல்வரிடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எம்.பி. கே.நவாஸ்கனி, மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள்,...
ஜூன் 8-ம் தேதி டெல்லியில் கூடும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்தால் மனக்காயமுற்றிருக்கும் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கும் திமுக, காங்கிரஸ் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இனி பங்கேற்கமாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது.
திமுக-வின் இந்த முடிவு ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். அதேசமயம் இந்த விஷயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சத்தமில்லாமல் அடித்துச் சாய்த்துவிட்ட திருப்தியில் இருக்கிறது...
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்; ஆனால் திமுக எங்கள் மீது பழிபோடுகிறது” – நாராயணசாமி
admin - 0
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு சாதாரண தொண்டன் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாகியிருக்கிறது. திமுக எங்கள் மீது பழிப்போடுகிறது" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜூன் 4) இரவு பழநிக்கு வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு பழநி அடிவாரத்தில்...










