Google search engine
தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட ரசாயன கசிவு காரணமாக, ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென பூமிக்குள் புதைந்தது. சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல இடங்களில் தரைக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டு வரப்படுகிறது. தியாகராய நகர் பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால், பள்ளம் தோண்டும்போது, இக்கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் மிகவும் கவனத்துடன்...
சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவு திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார். உணவு திருவிழாவை ஆர்வத்துடன் காணவும், ஆசையுடன் உணவு உண்டு மகிழவும் தினசரி ஆயிரக்கணக்கான...
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்துள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில்...
திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகத்தை ஜனவரி மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதன் ஒருபகுதியாக ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக ஊழல் பட்டியல் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ‘திமுக ஃபைல்ஸ்’ பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக...
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வுப் பகுதி, காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்​றது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி​யில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​துக்கு தெற்கே 450 கிமீ தொலை​விலும், சென்னைக்கு வடகிழக்கே...
தமிழகத்தில் பொருளாதார நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையை தமிழக அரசு பரிசீலித்து அமல்படுத்த வேண்டுமென கல்வியாளர் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (Economically Weaker Section) அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 5 ஆண்டுகளாகின்றன. இந்த ஒதுக்கீட்டின்படி தகுதியானவர்கள் யார் என்பதை மத்திய...
சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முடித்து வைத்தார். இந்நிலையில், வரும் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது: சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஜனவரி 6-ம் தேதி கூட்டியுள்ளார். அன்று காலை...
சென்னை - பினாங்கு நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொடங்குகிறது. மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு மாநிலமான பினாங்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது. அங்கு தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்தியாவில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவை இயக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து...
அலோபதி - ஆயுஷ் மருத்துவம் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ‘அலோபதி - ஆயுஷ் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் - 2024’ என்ற மாநாட்டை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி நேற்று தொடங்கி...
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், ஒரே நாளில் 21 சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வரின் பசுமை தமிழக தொலை நோக்கு திட்டத்தின் உதவியுடன், தொழில்துறை சார்பில், புதிய முயற்சியாக, பசுமை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று (டிச.20) ஒரே நாளில், ஒரு...