தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: ஆளுநர் உரை ஆளுங்கட்சிக்கு முழு ஆதரவை தெரிவிக்கும் அறிவிப்பாக மட்டுமே இருந்தது. இதுபோன்ற அறிவிப்புகளை நிறைய பார்த்துவிட்டோம்.
வெறும் அறிவிப்பாக மட்டுமில்லாமல், அதிகாரப்பூர்வமான, ஆளுமைமிக்க ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி இருக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டர்தான் தீர்வாக அமையும். சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் ஆரம்பத்திலும்,...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து...
“எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,”எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள்...
“தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை. தேமுதிகவும் ஆதரிக்கிறது. கூடவே, மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியதை போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையை யோசிக்க வேண்டும்.” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள்...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என முதல்வரை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் எந்த பகுதியிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தாமிர ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினார்.
முதல்வரை சந்தித்த பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நானும், பல விவசாயிகள் மற்றும்...
பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் தெளிவான விளக்கம் இல்லை. பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டண
உயர்வு இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின்வெட்டு இல்லாத சூழலை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது.
தமாகா தனது அடித்தளத்தை...
தமிழர் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் இ.சுந்தரமூர்த்தி: நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் புகழாரம்
admin - 0
தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி என்று, சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, சென்னையில் கடந்த மே 13-ம் தேதி காலமானார். இந்நிலையில், தமிழியக்கம், டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், அவருக்கு நினைவேந்தல் நெகிழ்வு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம், தமிழ் இணையக்கல்விக்...
முதல்வர் விஜய்யுடன் எச்டி ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு – தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டுமான திட்டம்
admin - 0
தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள் சந்தித்தனர்.
தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் எச்டி ஹுண்டாய். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய...
தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி...
தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் சுமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய்,...










