ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்கில் தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
admin - 0
தாம்பரம் தாலுகாவில் உள்ள கோவிலாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக்கூறி திருநின்றவூரைச் சேர்ந்த சி.சதீஷ் என்பவர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலரான ஜி.பிரகாஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த டி.சினேகா, பரங்கிமலை பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன், தாம்பரம் தாலுகா வட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு...
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில்...
‘நீங்கள் விதைத்த விதைகள் இன்னும் பல நல்லகண்ணுக்களாக மலரும்’ – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புகழஞ்சலி
admin - 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சேவையையே தனது வாழ்நாள் கீதமாகக் கொண்டு வாழ்ந்த ஓர் உன்னதமான ஆன்மாவான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, மிகுந்த துயரத்துடன் நாம் விடை கொடுக்கிறோம். ஒன்பது தசாப்தங்களாகத் தன்னலமற்ற...
விசில் கட்சியில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 23-ம் தேதி அறிவிப்பதாக இருந்தார்களாம். ஆனால், கதர் பார்ட்டிகள் 26-ம் தேதி வரை அவகாசம் கேட்டதால் அதை ஒத்திவைத்தார்களாம்.
கதர் தலைகளின் பதிலைப் பொறுத்து இந்த மாத இறுதிக்குள் விசில் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள். முதல்கட்டமாக, முக்கிய தலைகள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் யோசனையில் இருக்கிறார்களாம்.
அதன்படி, விசில் நாயகர் தலைநகரில் இருக்கும் ‘பூர்’ தொகுதி...
“அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; பழனிசாமிக்கு வெற்றியே கிடையாது” – திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கருத்து
admin - 0
“அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி...
நல்லகண்ணுவின் மறைவு நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: முதுபெரும் அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு...
சென்னை – சிங்கப்பூர் விமானத்தில் ஏசி பழுது: ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு
admin - 0
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏசி இயங்காத நிலையில், ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் 4 மணி நேரமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 198 பயணிகளுடன் நேற்று காலை 7.20 மணிக்கு புறப்படத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரானபோது, விமானத்துக்குள் ஏசி வேலை செய்யாததால், பயணிகள் கூச்சல் போட்டனர்.
இதையடுத்து, விமானத்தில் கோளாறு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு...
‘தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாத காலத்துக்குள் அகற்ற வேண்டும்’ என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலரான ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்...
தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் ‘சூப்பர் ஹிட்’ – சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பெருமிதம்
admin - 0
‘தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரி வித்தார். ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
இதில் நேற்று, சென்னை வானகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது: நான், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.
இன்று அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,...
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சர் சேகர்பாபுவிடம் கோயில் பணியாளர்கள் வலியுறுத்தல்
admin - 0
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு, கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, கோயில் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் வலியுறுத்தினர்.
குறிப்பாக, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். கோயிலில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.
மாத ஓய்வூதியத் தொகையான ரூ.5 ஆயிரம் அடிப்படையாகக்...








