வடமாநிலங்களில் பிரபலமான ஹோலி பண்டிகை வரும் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "ஹோலி, தீபாவளி பண்டிகையின்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் நடப்பாண்டில் அமல்படுத்தப்படும்.
வரும் ஹோலி பண்டிகை...
ராஜஸ்தானில் அரசியல் நோட்டீஸ் ஒட்டியதற்காக இங்கிலாந்தை சேர்ந்த இருவர் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் பல இடங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் விசாரணையில் இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவருக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் முதல்வராகிறார் யும்நம் கேம்சந்த் சிங் – முடிவுக்கு வருகிறது குடியரசுத் தலைவர் ஆட்சி
admin - 0
மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்டது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பிப்ரவரியில் பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன்...
பூடானின் எரிசக்தி துறை அமைச்சர் லியோன்போ ஜெம் ஷெரிங் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து மத்திய மின்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”பூடானின் புனாட்சங்சு-2 நீர்மின் திட்டத்தின் (1020 மெகாவாட்) மின் உற்பத்தியை வணிக ரீதியாக மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்தியா - பூடான் இடையே மின்சார பரிமாற்ற உள்கட்டமைப்புக்கான திட்டமிடல் குறித்தும்...
திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இல்லை: அமலாக்கத் துறை
admin - 0
திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு தொடர்பான வழக்கில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத் துறை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவத்தில் அவருக்கு நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இல்லை என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப் பத்திரிகையில், திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இருப்பதற்கான...
“இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்ளும், இவ்வளவு பொய் பேசும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை” என்று தலைமைத் தேர்தல் ஆணையருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக சாடினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்தித்தார். அவருடன் 15 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகளும், தீவிர...
அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டார்.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த 3 நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ...
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தை இணைக்கும் வகையில் சிலிகுரி பூமிக்கடியில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பாதை இந்தியாவின் பிரதான பகுதியையும் வட கிழக்கு மாநிலங்களையும் இணைக்கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலைவுடைய மிக குறுகிய பாதை ஆகும். இதன் இரு புறமும் நேபாள, வங்கதேச எல்லைகள் அமைந்துள்ளன.
வடபகுதியில்...
கடந்த ஆண்டில் முதன்முறையாக நேபாளத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிருக்கான டி-20 உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணியினர், பயிற்சியாளர் வெங்கடேஷப்பா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ எம்.எல். ராஜு ஆகியோருடன் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோயிலின் வெளியே இந்திய அணியின் கேப்டன் தீபிகா கூறும்போது, “முதன் முறையாக நடந்த பார்வையற்றோருக்கான போட்டியில் உலக...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் விபி-ஜி- ராம் ஜி திட்டத்தின் பெயரை குறிப்பிடவில்லை. இத்திட்டத்துக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) பெயர் விபி- ஜி ராம் ஜி என்று சமீபத்தில் மாற்றப்பட்டது. மேலும், ஏற்கெனவே இருந்த திட்டத்துக்கு மத்திய அரசு 100% நிதி அளித்தது. மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி அதற்கான நிதியை மத்திய அரசு 60 %...
