Google search engine
வடமாநிலங்களில் பிரபலமான ஹோலி பண்டிகை வரும் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "ஹோலி, தீபாவளி பண்டிகையின்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் நடப்பாண்டில் அமல்படுத்தப்படும். வரும் ஹோலி பண்டிகை...
ராஜஸ்தானில் அரசியல் நோட்டீஸ் ஒட்டியதற்காக இங்கிலாந்தை சேர்ந்த இருவர் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் பல இடங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் விசாரணையில் இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவருக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்​பூரில் இரண்​டாவது முறை​யாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்சி விரை​வில் முடிவுக்கு வரவுள்ள நிலை​யில் அம்​மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவின் யும்​நம் கேம்​சந்த் சிங் பதவி​யேற்க உள்​ளார். மணிப்​பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி, குகி சமூகத்​தினர் இடையே இனக் கலவரம் மூண்​டது. இதில் 260 பேர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் இடம் பெயர்ந்​தனர். பல மாதங்​களாக வன்​முறை நீடித்​த​தால் கடந்த 2025 பிப்​ர​வரி​யில் பாஜகவை சேர்ந்த முதல்​வர் பிரேன்...
பூடானின் எரிசக்தி துறை அமைச்சர் லியோன்போ ஜெம் ஷெரிங் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்துப் பேசினார். இது குறித்து மத்​திய மின்​சா​ரத் துறை வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில்,”பூடானின் புனாட்​சங்​சு-2 நீர்​மின் திட்​டத்தின் (1020 மெகா​வாட்) மின் உற்​பத்​தியை வணிக ரீதி​யாக மேம்​படுத்​து​வது குறித்து இரு தரப்​பினரும் விவா​தித்​தனர். இந்​தியா - பூடான் இடையே மின்​சார பரி​மாற்ற உள்​கட்​டமைப்​புக்​கான திட்​ட​மிடல் குறித்​தும்...
திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு தொடர்பான வழக்கில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத் துறை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவத்தில் அவருக்கு நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இல்லை என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப் பத்திரிகையில், திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இருப்பதற்கான...
“இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்ளும், இவ்வளவு பொய் பேசும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை” என்று தலைமைத் தேர்தல் ஆணையருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக சாடினார். திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்தித்தார். அவருடன் 15 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகளும், தீவிர...
அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டார். அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த 3 நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ...
வடகிழக்கு மாநிலங்​கள், மேற்​கு ​வங்​கத்தை இணைக்​கும் வகை​யில் சிலிகுரி பூமிக்​கடி​யில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்​கப்​படும் என்று ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார். மேற்​கு​ வங்​கத்​தின் சிலிகுரி பாதை இந்​தி​யா​வின் பிர​தான பகுதியை​யும் வட கிழக்கு மாநிலங்​களை​யும் இணைக்​கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலை​வுடைய மிக குறுகிய பாதை ஆகும். இதன் இரு ​புற​மும் நேபாள, வங்​கதேச எல்​லைகள் அமைந்​துள்​ளன. வடபகு​தி​யில்...
கடந்த ஆண்​டில் முதன்​முறை​யாக நேபாளத்​தில் நடைபெற்ற பார்​வையற்ற மகளிருக்​கான டி-20 உலக கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி ​வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி​யினர், பயிற்​சி​யாளர் வெங்​கடேஷப்​பா, தெலுங்கு தேசம் கட்​சி​யின் எம்​எல்ஏ எம்​.எல். ராஜு ஆகியோ​ருடன் நேற்று காலை திருப்பதி ஏழு​மலை​யானை தரிசித்​தனர். அவர்​களுக்கு தேவஸ்​தானம் சார்​பில் பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்கப்​பட்​டது. கோயி​லின் வெளியே இந்திய அணி​யின் கேப்​டன் தீபிகா கூறும்போது, “முதன் முறை​யாக நடந்த பார்​வையற்​றோருக்​கான போட்​டி​யில் உலக...
நி​தி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் பட்​ஜெட் உரை​யில் விபி-ஜி- ராம் ஜி திட்​டத்​தின் பெயரை குறிப்​பிட​வில்​லை. இத்​திட்​டத்​துக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்​கீட்டு செய்​யப்​பட்​டுள்​ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்​புற வேலை​வாய்ப்பு உத்​தர​வாதத் திட்​டத்​தின் (எம்​ஜிஎன்​ஆர்​இஜிஎஸ்) பெயர் விபி- ஜி ராம் ஜி என்று சமீபத்​தில் மாற்​றப்​பட்​டது. மேலும், ஏற்​கெனவே இருந்த திட்​டத்​துக்கு மத்​திய அரசு 100% நிதி அளித்​தது. மாற்​றியமைக்​கப்​பட்ட திட்​டத்​தின்​படி அதற்​கான நிதியை மத்​திய அரசு 60 %...