Google search engine
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும்"...
அஸ்​வினி குமார் உபாத்​யாய் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “அரசி​யல் கட்​சிகள் அறிவிக்​கும் இலவச திட்​டங்​களை தேர்​தல் முறை​கேடு என அறிவிக்க வேண்​டும். தேர்​தல் அறிக்கைகளில் வெளி​யிடப்​படும் இலவசத் திட்ட அறி​விப்​பு​களை முறைப்​படுத்த வேண்​டும்” என்று கோரி​யுள்​ளார். இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன்பு மனு​தா​ரர் அஸ்​வினி குமார் உபாத்​யாய் முன்​வைத்த வாதத்​தில் கூறிய​தாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்​களுக்கு விரை​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற...
மேற்கு வங்க சட்​டப்​பேர​வை​யில் நிதி​யமைச்​சர் சந்திரிமா பட்​டாச்​சார்யா ரூ.4 லட்சம் கோடியில் 2026-27 நிதியாண்​டிற்​கான இடைக்​கால பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார். பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்​களைக் குறி​வைத்​து, ‘லக்​ஷ்மிர் பந்​தர்' திட்​டத்​தின் கீழ் மகளிருக்கு வழங்கப்​படும் மாதாந்​திர உதவித்​தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்​ளது. வேலை​யில்​லாத இளைஞர்​களுக்​காக யுவ சாத்தி திட்டத்தின் கீழ் 21 முதல் 40 வயதுக்​குட்​பட்ட வேலை​யில்​லாத இளைஞர்​களுக்கு வேலை கிடைக்​கும் வரை மாதம் ரூ.1,500 உதவித்​தொகை வழங்கப்​படும்...
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த மாதம் 30-ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் நடந்துள்ளது. முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆஷிஷ் உயிரிழந்ததாக...
ஆங்​கில மருத்​துவத்தை அடுத்​து, யுனானி மருத்துவக் கல்வி இந்​தி​யில் போதிக்​கப்பட உள்​ளது. நாட்​டில் முதன்​முறை​யாக மத்​திய பிரதேச மாநிலத்​தில் இது அமலாக உள்ளது. பாஜக ஆளும் ம.பி.​யில் ஆங்​கில மருத்​து​வக் கல்வி இந்​தியில் துவக்​கப்​பட்​டது. அந்​தவகை​யில் யுனானி மருத்​துவ கல்வி இந்தியில் தொடங்​கப்பட உள்​ளது. யுனானி மருத்​து​வத்தை இந்தியில் போதிக்க அதன் பாடங்​களை ம.பி. அரசு தயார் செய்து வரு​கிறது. இந்நிலை​யில், அம்​மாநிலத்​தின் ஆயுஷ் துறை உருது புத்தகங்களை இந்​தி​யில் மொழி...
கூட்​டணி அரசில் சமூக சமநிலை​யைப் பேணும் வித​மாக, குகி சமூகத்​தைச் சேர்ந்த பா.ஜ.க எம்​.எல்.ஏ நெம்சா கிப்​ஜென் மற்​றும் நாகா மக்​கள் முன்​னணி​யைச் சேர்ந்த எம்​.எல்​.ஏ. எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்​வர்​களாகப் பதவி​யேற்​றனர். இதில் நெம்சா கிப்​ஜென், டெல்​லி​யில் உள்ள மணிப்​பூர் பவனில் இருந்து காணொலி வாயி​லாகப் பதவி​யேற்​றுக் கொண்​டார்.மேலும், பா.ஜ.க-​வின் கோவிந்​தாஸ் கொந்​தவுஜம், என்​.பி.பி கட்​சி​யின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றனர். இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய...
உத்தர பிரதேச மாநிலம் காசி​யா​பாத்​தைச் சேர்ந்த வெளி​நாட்டு கரன்சி வியா​பாரி பாரத் சிட்டி சொசைட்டி என்ற அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் 9-வது தளத்​தில் வசித்து வரு​கிறார். இவருக்கு 16, 14, 12 ஆகிய வயதில் 3 மகள்கள் இருந்தனர். இவர்​கள் கரோனா காலத்​தில் செல்​போன் மூலம் ஆன்​லைன் வகுப்​பு​களில் பாடம் கற்ற போது ஆன்​லைன் விளை​யாட்டை கற்றுக் கொண்​டனர். நாளடை​வில் இவர்​கள் கொரியன் ஆன்லைன் விளை​யாட்​டுக்கு அடிமை​யாகி​யுள்​ளனர். இந்​நிலை​யில் இவர்​கள் நேற்று முன்​தினம்...
 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தின் `மகர துவார்' பகுதியில் ராகுல் காந்தி, பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த வழியாக வந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களைப் பார்த்த ரவ்னீத்சிங் பிட்டு, ஏதோ போரில் வெற்றி பெற்றவர்கள் போல இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு ராகுல்...
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில் இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியை கைப்பற்றி உள்ளனர்.
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கண்டறிந்துள்ளது. இதையடுத்து ‘சரியான உணவை உண்பது’ என்ற இயக்கத்தை தேசிய அளவில் முன்னெடுத்துள்ளோம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக...