Google search engine
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. எனினும் மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும்...
ஏஐ போன்ற நவீன தொழில்​ நுட்​பங்​களை கண்டு அஞ்​சாமல் மாணவர்​கள் அவற்றை தங்​களின் அறி​வாற்​றலை பெருக்​கு​வதற்​காக பயன்​படுத்​திக்கொள்ள வேண்​டும் என மாணவர்​களுக்கு பிரதமர் மோடி அறி​வுரை வழங்​கி​னார். குஜ​ராத்​தின் தேவ​மொக்​ரா, தமிழகத்​தின் கோ​யம்​புத்​தூர், சத்தீஸ்கரின் ராய்ப்​பூர் மற்​றும் அசாமின் குவாஹாட்டி உள்​ளிட்ட நகரங்​களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்​களு​டன் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: தலை​மைப் பண்பு என்​பது தேர்​தலில் போட்​டி​யிடு​வதோ அல்​லது அரசி​யல் கட்சி தொடங்​கு​வதோ அல்ல;...
தூத்​துக்​குடி திமுக எம்​.பி.கனி​மொழி மக்​களவை​யில் எழுப்​பிய ஒரு கேள்விக்கு மத்​திய அமைச்​சர் கஜேந்​திர சிங் ஷெகாவத் பதில் அளித்​துள்​ளார். அதில், “2021- 2026ம் ஆண்டு கால​கட்​டத்​தில் தொல்​லியல் அகழாய்வுக்​காக மத்​திய அரசின் ஒப்​புதலை பெறு​வதற்​காக தமிழ்​நாடு தொல்​லியல் துறை மொத்​தம் 45 பரிந்​துரைகளை அனுப்​பியது. 2021ல் 12, 2022ல் 8, 2023ல் 3, 2024ல் 10, 2025ல் 12 என 45 பரிந்துரைகள் வந்​தன. இதில் 2025ல் வந்த 12...
டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்ய பாக்​சி, அன்​ஜாரியா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரா​னார். அவர் கூறும்​போது, “டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வரைவு கொள்​கையை தயாரித்து உள்​ளது. இதுதொடர்​பாக தொடர்ந்து ஆலோசனை நடத்​தப்​பட்டு...
கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பைலட் உட்பட இரண்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர். கர்நாடகாவின் கலபுர்கி பகுதியில் இருந்து தனியார் பயிற்சி விமானம் ஒன்று பெலகாவி நோக்கி நேற்று புறப்பட்டது. நடுவானில் அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயிற்சி விமானத்தை விஜயப்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயலில் தரை இறக்க பைலட் முயன்றார். அந்த விமானம் தரையில் மோதி...
நேதாஜி சுபாஷ் சந்​திர போஸின் இந்​திய தேசிய ராணுவத்​தில் (ஐஎன்ஏ) மலேசி​யா, சிங்​கப்​பூரை சேர்ந்த இந்​திய வம்​சாவளி​யினர் இணைந்து பிரிட்​டிஷ் படைக்கு எதி​ராக வீர, தீரத்​துடன் போரிட்​டனர். அவர்​களில் பலர் உயிரோடு உள்​ளனர். தற்​போது மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை செயல்​படு​கிறது. இந்த அறக்​கட்​டளை​யில் ஐஎன்ஏ படை​ வீரர்​கள், உயி​ரிழந்த வீரர்​களின் வாரிசுகள் உறுப்பினர்​களாக உள்​ளனர். கோலாலம்​பூரில் நேற்று மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை நிர்​வாகி​களை...
”​காங்​கிரஸ் எம்​.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்​திடம் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசா​ரிக்க வேண்​டும்” என்று அசாம் முதல்​வர் ஹிமந்​த பிஸ்வா சர்மா வலி​யுறுத்தி உள்​ளார். அசாம் மாநிலத்​தின் காங்​கிரஸ் எம்​.பி.கவுரவ் கோகோய். இவரது மனைவி பிரிட்​டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்​பர்ன். இவர்​கள் இரு​வருக்​கும் பாகிஸ்​தானுடன் தொடர்பு இருப்​ப​தாக​ குற்றச்சாட்டு எழுந்​தது. பாகிஸ்​தானின் திட்​டக் குழு ஆலோ​சகர் தவ்​கீர் ஷேக்​கிடம், கவுரவ் மனைவி எலிசபெத் பணி​யாற்றி...
ஹரியானா மாநிலம் பரீதாபாத் அருகில் சூரஜ்குந்த் மேளா சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுகிறது. இங்கு நேற்று முன்தினம் ராட்சத ராட்டினத்தில் 15 பேர் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எ​திரி நாட்டு செயற்​கைக்​கோள்​களை இனி இந்​தியா உளவு பார்க்க முடி​யும் என்ற நிலையை அடைந்​துள்​ளது. விண்​வெளி​யில் 50-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​ கோள்​களை ஏவி இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிலை​யம் (இஸ்​ரோ) நிர்​வகித்து வரு​கிறது. இந்த செயற்​கைக்​ கோள்​களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்​கும் மேல் என்று தெரிய​வந்​துள்​ளது. இந்நிலையில், அகம​தா​பாத்​தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் விண்வெளி நிறு​வனம், ஒரு செயற்கைக்​ கோளில் இருந்து மற்​றொரு பொருளைப் புகைப்​படம்...
மத்​திய கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா, நாட்​டின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புச் சேவை​யான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா பேசும்​போது, “பாரத் டாக்ஸி சேவை முதற்​கட்​ட​மாக டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அடுத்த 2 ஆண்​டு​களுக்​குள் அனைத்து மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களுக்​கும் இது விரிவுபடுத்தப்படும். குறிப்​பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை​யிலும், துவாரகா முதல் காமாக்யா...