உ.பி.யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்மிக மடம் தொடங்கியவர் பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்கள் உள்ளனர். நிரஞ்சன் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பட்டம் பெற்ற இவர், அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
பூஜா, கடந்த 2019 ஜனவரியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்டு,...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான நாராவாரி பல்லியில் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக, இன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளார்.
இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று காலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் விதிமுறைகளை மீறி வருவது தொடர்கதையாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட போது சசிகலா சீருடை அணியாமல், வெளியே ஷாப்பிங் சென்ற வீடியோ வெளியானது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, நடிகர் தர்ஷன் ஆகியோரும், ரவுடிகளும் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி சீனிவாஸ்...
ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் பிறபகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு...
கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார் ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இங்குள்ள கலிம் போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்...
நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.1.84 லட்சம் கோடியை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு
admin - 0
குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை' என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல்...
14 கேள்விக்கு சரியாக பதில் அளித்து கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு பெற்ற விவசாயி
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்றுள்ளார்.
இதுகுறித்து கைலாஷ் கூறிய தாவது: கடந்த 2018-ம் ஆண்டு ஹிங் கோலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கோன் பனேகா குரோர் பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்....
இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் இது அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது. இந்தியாவுக்குள் எளிதாக நுழைவதற்கு வசதி யாக இந்த அட்டையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய...
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக் குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காசிரங்கா பூங்காவுக்கு சனிக்கிழமை பெண் யானைக்குட்டி ஒன்று புதிய வரவாக வந்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி யோசனைப் படி புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு மாயாபின்' என்ற பெயரை சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து...
பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை.
இதையைடுத்து பூடான் ராணுவத்தினர்,...










