மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கும்: உச்ச நீதிமன்றம் கருத்து
admin - 0
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால், பெண்களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்டார்கள் என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொது நல மனுவை தள்ளுபடி செய்தது.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த பொதுநல மனுவில், மாதவிடாயின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மாதவிடாய் விடுப்புடன் கூடிய ஊதியமும், மாணவிகளுக்கு விடுமுறையும்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று சமர்ப்பித்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில்...
பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் பிரபல ரவுடி சிவ பிரகாஷ் (40) கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கிருஷ்ணராஜபுரம் பாஜக எம்எல்ஏ பைரத்தி பசவராஜை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாமீன் கோரி, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், பைரத்தி பசவராஜுக்கு ரூ.2 லட்சம் பிணையத் தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். வழக்கு தொடர்புடையவர்களை அச்சுறுத்தவோ, சாட்சியங்களை கலைக்கவோ...
நடப்பு நிதியாண்டில் கூடுத லாக ரூ.2.81 லட்சம் கோடி செலவினத்துக்கு அனுமதி கோரி 2-ம் கட்ட துணை மானியக் கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிலைத்தன்மை நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது துணை மானிய கோரிக்கை காரணமாக 2025-26 பட்ஜெட்...
ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
நான்காவது இடத்துக்கு பாஜக ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திலீப் ரே மற்றும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே போட்டி நிலவுகிறது. 14 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி பிஜு...
டெல்லி அருகே காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. சண்டீகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் படித்து வந்தார்.
இவர் தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியிலிருந்து கடந்த 2013, ஆகஸ்ட் 20ம் தேதி தவறி விழுந்தார். இதில் அவருக்கு நரம்பிழைத் தண்டில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகும் நினைவு திரும்பாத நிலையில், மருத்துவ ரீதியில் உணவும், நீரூட்டமும் அளித்தும் தொண்டையில் சுவாச குழாய் பொருத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. படுத்த...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம்: திரிணமூல் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
admin - 0
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையத்தால் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இந்த எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாகவும், இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. இதைத் தொடர்ந்து அவரை...
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சரணடைந்தவர்களில் 8 பேர் மாவோயிஸ்ட்களின் முக்கியக் குழு உறுப்பினர்கள் ஆவர். மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் மாவோயிஸத்தை முற்றிலும் ஒழிப்பதாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிஜப்பூர் மாவட்டத்திலிருந்து 37 பேரும், தந்தேவாடாவில் இருந்து 30...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
மக்களவையில் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே, அவையை நடத்திக் கொண்டிருந்த ஜெகதாம்பிகா பால், சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்குமாறும், உறுப்பினர்கள் தங்களது...
5 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதி இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு கடந்த 10ம் தேதி திரும்பியுள்ளனர்.
வழக்கமாக ஆய்வு முடிந்த ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். எனவே, 5 மாநில...










