Google search engine
சு​மார் 20,000 டன் எரிவாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த மார்​ஷல் தீவு​களின் கொடி பொருத்​தப்​பட்ட சரக்​குக் கப்​பல், குஜராத்​தின் கட்ச் மாவட்​டத்​தில் உள்ள கண்ட்லா துறை​முகத்தை வந்​தடைந்​துள்​ள​தாக ஏஎன்ஐ செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ‘சிமி' என்று அடை​யாளம் காணப்​பட்ட அந்​தச் சரக்​குக் கப்​பல், உலக அளவில் மிக முக்​கியப் பாதை​யாகக் கருதப்​படும் ஹார்முஸ் ஜலசந்​தியை கடந்த மே 13 அன்று கடந்​து, இந்​தி​யத் துறை​முகத்தை வந்​தடைந்​த​தாக அறிக்​கை​யில் குறிப்பிடப்பட்டுள்​ளது. இந்​தி​யா​வில்,...
ம.பி.​யின் தார் நகரில் உள்ள போஜ்​சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்பளித்​துள்​ளது. ம.பி. உயர் நீதி​மன்​றத்​தின் இந்த தீர்ப்பை தாங்​கள் ஏற்​க​வில்லை. உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப் போவ​தாக​வும் முஸ்​லிம் தரப்​பினர் அறிவித்துள்​ளனர். இந்நிலையில், அயோத்தி விவ​காரத்​துக்கு பிறகு, பிற வழக்குகளிலும் இதே​போன்ற முடிவு​கள்எடுக்​கப்​படுமா என்ற கேள்​வி எழுந்துள்ளது. தற்​போது நாட்​டில் மசூ​தி- கோ​யில் சர்ச்சை தொடர்​பாக 10 வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில்...
நீட் வினாத்தாள் கசிவு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) புதிதாக 4 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நீட், ஜேஇஇ, கியூட், சிமாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி என்டிஏ தலைவராகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மேலும்...
போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்​டுள்ள வழக்கு தொடர்​பாக, தனது மகனை போலீ​ஸில் ஒப்​படைத்ததாக மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் தெரி​வித்​தார். பாஜக​வின் தெலங்​கானா மாநில முன்​னாள் தலை​வரும், தற்​போதைய மத்​திய உள்​துறை இணை அமைச்​சரு​மான பண்டி சஞ்சய் குமார் இது தொடர்​பாக எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: சத்​யமேவ ஜெயதே (வாய்​மையே வெல்​லும்). சட்​டம் மற்​றும் நீதித்​துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத்...
வி​மானப்​படை பயன்​பாட்​டுக்​காக குஜ​ராத்​தின் வதோதரா நகரில் உள்ள டாடா - ஏர்​பஸ் மையத்​தில் தயாரிக்கப்பட்ட ஏர்​பஸ் சி-295 போக்​கு​வரத்து விமானம் பரிசோதனைக்கு தயார் நிலை​யில் உள்​ளது. இந்​திய விமானப்​படை​யில் வீரர்​கள் மற்​றும் சரக்கு போக்​கு வரத்துக்கு பயன்​படுத்​தப்​பட்ட ஆவ்ரோ -748 விமானங்​களுக்கு மாற்​றாக ஏர்​பஸ் நிறு​வனத்​தின் சி-295 ரக விமானத்தை சேர்க்க முடிவு செய்​யப்​பட்​டது. இதில் 70 வீரர்​கள் பயணிக்​கலாம், ராணுவத் தளவாட பொருட்​களை​யும் எடுத்​துச் செல்​லலாம். குறுகிய ஓடு​தளத்​தில்...
டெல்லி செங்​கோட்டை கார் குண்​டு​வெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்​றப்​பத்​திரி​கை​ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை முன் தீவிர ​வா​தி​களின் கார் குண்​டு​வெடிப்பு நிகழ்ந்​தது. இதில் 11 பேர் உயி​ரிழந்​தனர். என்ஐஏ வசம் ஒப்​படைக்​கப்​பட்ட இந்த வழக்​கில் 10 பேர் கைதாகினர். காரை ஓட்​டிவந்து வெடிக்​கச் செய்த முக்​கிய குற்​ற​வாளி புல்​வா​மாவைச் சேர்ந்த டாக்​டர் உமர் உன் நபி என தெரிய​வந்​தது. டெல்லி பாட்​டி​யாலா...
நாடு முழுவதும் உள்ள பல்​வேறு மாநிலங்​களில் 2 கட்டங்களாக வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் (எஸ்​ஐஆர்) ஏற்​கெனவே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இந்நிலை​யில், 3-வது கட்​ட​மாக எஞ்​சிய 16 மாநிலங்​கள் மற்​றும் 3 யூனியன் பிரதேசங்​களில் இந்த பணி​கள் தொடங்​கப்பட உள்ளதாக தேர்​தல் ஆணை​யம் நேற்று தெரி​வித்​துள்​ளது. இருப்பினும், இமாச்​சலப் பிரதேசம், ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் ஆகிய பகு​தி​களில் தற்​போதைக்கு எஸ்ஐஆர் பணி​கள் நடைபெறாது என்​ப​தை​யும் தேர்​தல் ஆணை​யம் தெளிவுபடுத்தியுள்​ளது. இதுகுறித்து...
மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்தலில் பதிவான வாக்​கு​கள் கடந்த 4-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்கப்பட்​டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்​துள்​ளது. முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி பதவியேற்​றுள்​ளார். இந்​நிலை​யில் தேர்​தலுக்​குப் பின்​னர் மேற்கு வங்​கத்​தின் பல பகுதி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் நடந்​தன. மேலும் திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அலு​வல​கத்​தின் மீது பாஜக தொண்​டர்​கள் தாக்​குதல் நடத்தி தீவைத்​தனர் என்​றும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக திரிண​மூல்...
கேரள மாநிலத்​தில் உள்ள சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிப​தி​கள் பி.வி நாக ரத்​தி​னா, எம் எம் சுந்​தரேஷ், ஏ.அமானுல்​லா, ஏ.ஜி. மசி, பி.பி. வர்​லே, ஆர். மகாதேவன், ஜோய்​மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 16-வது நாள்...
 வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை...