பவானிப்பூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்ட மம்தா திட்டம்: கடும் சவாலாக விளங்கும் பாஜக தலைவர்கள்
admin - 0
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பவானிப்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா வெற்றி பெற்று முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் மீண்டும் அவர் பவானிப்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலைப் போலவே,...
கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடரப் போவதாக தெரிவித்தார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று வருகிற மே மாதத்துடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள்...
சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்: ஈரானில் இருந்து திரும்பிய இந்தியரின் பயண அனுபவம்
admin - 0
சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேர பயணம் என இந்தியர் ஒருவர் பல சிரமங்களை எதிர்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி சட்டவிரோதமாக டீசல் ஏற்றிச் செல்வதாக கூறி ‘எம்.டி. வேலியன்ட் ரோர்' என்ற எண்ணெய் கப்பலை சர்வதேச கடல் எல்லையில் ஈரான் ராணுவம் சிறை பிடித்தது. கப்பலில் 16 இந்தியர்கள் உள்ளிட்ட 18 ஊழியர்கள் இருந்தனர். இவர்களில்...
கேரளத்தில் முதல்முறை வாக்காளர்களை கவர அல்வா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதுமையான முயற்சியால் முதல்முறை வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளத்தில் வரும் 9-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களை கவர அவர்களுக்கு அல்வா வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு...
வடக்கு கேரளத்தில் முந்தும் எல்டிஎஃப்; வயநாடு, மலப்புரத்தில் யுடிஎஃப் வெற்றிமுகம் – கருத்துக் கணிப்பில் தகவல்
admin - 0
கேரளத்தில் மொத்தம் 140 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 71 தொகுதிகள் தேவை என்ற நிலை உள்ளது.
இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி க்கும் (எல்டிஎஃப்) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யுடிஎஃப்) இடையே பலத்த போட்டி உள்ளது. அதேநேரம் பாஜகவும் சில தொகுதிகளில் இரு முன்னணி வேட்பாளர்களுக்கும் பலத்த சவாலை அளித்து வருகிறது.
இந்நிலையில் மனோரமா...
பிஹாரில் மிக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர் எனற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவரான அவர், மத்திய அரசியலுக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 16ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்நிலையில் அவர் தனது சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
எனினும், முதல்வர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் மாநிலங்...
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுவது ஏன்? – மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் கேள்வி
admin - 0
திமுக எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது: யுபிஎஸ்சி-யின் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது.
இதனால் தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த திறமையான தேர்வர்கள் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படுகிறார்கள். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே தமிழ் உட்பட அனைத்து 22 மொழிகளிலும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். யுபிஎஸ்சி தேர்வுக்கான மதிப்பெண் வழங்கும்...
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த இயக்கத்தில் முக்கிய நிர்வாகியாகவும், மூளையாகவும் செயல்பட்டு வந்தார்.
இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும் என ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், சோமண்ணா உள்ளிட்ட பலர் ஆந்திர டிஜிபி முன்னிலையில்...
உத்தர பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்த விவசாயி விமான நிலையத்துக்கு நிலம் வழங்கி ரூ.15 கோடியை பெற்றார். இதன் மூலம் அவர் சொந்தமாக ஹெலிகாப்டரை வாங்கி உள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவின் ஜேவார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். சுமார் 11,750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் ஆகும்....
மாநிலங்களவையின் ஜீரோ நேரத்தில் பாஜக எம்.பி கே.லட்சுமன் நேற்று பேசியதாவது: தமிழகம், கேரளா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
மதத்தின் பெயரால் ஒபிசி இட ஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுகிறது. இடஒதுக்கீட்டு கொள்கை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்குவது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக உயர் நீதிமன்றங்கள்...










