Google search engine
டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர் ரேகா குப்தா தலை​மையி​லான அரசு பல்வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யின்​போது உரிய விதி​களைப் பின்​பற்ற அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வரும் நவம்​பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாக​னங்​கள் மட்​டுமே டெல்​லிக்​குள் அனு​ம​திக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு...
ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது. இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் கூறிய​தாவது: மார்​வாரி...
 டிஜிட்டல் மாயம் காரணமாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக திகழ்ந்தார். மத்தியப் பிரதேசம் தர் மாவட்டம் தாம்நாத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் டாங்ளே. தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தொடங்கிய டி-மேட் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு ‘ஹர்சில் அக்ரோ லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் 1,312 பங்குகள் வரவு வைக்கப்பட்டன. டிஜிட்டல் மாயம் காரணமாக தவறாக கணக்கிடப்பட்டு வந்த...
 உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் - பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது....
சத்​தீஸ்​கர் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் ஒழிப்பு பணியை பாது​காப்பு படை​யினர் தீவிர​மாக மேற்​கொண்​டனர். இதன் காரண​மாக பல மாவோ​யிஸ்ட்​கள் என்​க​வுன்ட்ட​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த மாதத்​தின் 3-வது வாரத்​தில் மட்​டும் 238 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​தனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள 13 பெண்​கள் உட்பட 21 மாவோ​யிஸ்ட்​கள் போலீ​ஸார் முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு நேற்று சரண் அடைந்​தனர். இதுகுறித்து பஸ்​தார் ஐ.ஜி சுந்​தர்​ராஜ் கூறும்​போது, ‘‘மாவோ​யிஸ்ட்​கள் வன்​முறையை கைவிட்​டு,...
டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இரண்டு அடுக்​கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்​தில் 70 பயணி​கள் இருந்​தனர். ஆக்ரா - லக்னோ தேசிய எக்​ஸ்​பிரஸ் நெடுஞ்​சாலை​யில் ரேவ்ரி பகு​தி​யில் உள்ள சுங்கச் ​சாவடி அருகே நேற்று அதி​காலை பேருந்து சென்றபோது திடீரென தீப்​பிடித்​தது. உடனடி​யாக...
இந்​தி நடிகர் சல்​மான் கான் தீவிர​வாதியாம் என பாகிஸ்​தான் அரசு கூறியுள்​ளது. சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் இந்தி நடிகர்​கள் சல்​மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் சல்​மான் கான் பேசும்​போது, “இப்​போது, இந்தி திரைப்​படத்தை இங்கு வெளி​யிட்​டால் அது சூப்​பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்​லது மலை​யாள திரைப்​படம் வெளி​யிட்​டாலும் பல நூறு கோடி வசூலாகும்....
இண்​டிகோ ஏர்​லைன்ஸ் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான பயணி​கள் விமானம் கொல்​கத்​தா​வில் இருந்து நேற்று ஸ்ரீநகருக்கு புறப்​பட்​டது. இ​தில் 166 பேர் பயணித்​தனர். உ.பி. எல்​லை​யில் விமானம் பறந்​த​போது எரிபொருள் டேங்​கில் கசிவு ஏற்​பட்​டிருப்​பதை விமானிகள் கண்​டறிந்தனர். உடனடி​யாக வாராணசி விமான நிலைய கட்​டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு வாராணசியில் விமானம் தரை​யிறக்​கப்​பட்​டது.
கொல்கத்தாவில் தீபாவளி நாளில் பட்டாசு சத்தம் மற்றும் புகையில் இருந்து தப்பிக்க தெரு நாய் ஒன்று மெட்ரோ ரயிலில் தஞ்சம் புகுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் தெரு நாய் ஒன்று ப்ளூலைன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதும், அது ஓய்வெடுக்க அமைதியான இடம் தேடி ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதும் தெரிகிறது. எதிர்பாராத இந்தப் பயணியை கண்டதும் ரயில் பயணிகள்...
பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள், 11 தொகு​தி​களில் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிடு​கின்​றனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை தேர்​தலில் 2-வது மற்​றும் கடைசி கட்ட தேர்​தலில் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் கடந்த 20-ம் தேதி​யுடன் முடிந்​தது. அப்​போது, 11 தொகு​தி​களில் இண்​டியா கூட்​டணி கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளனர். இதனால் இண்​டியா...