மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் தனது அறக்கட்டளை குழுவினருடன் இந்தியா வந்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடா பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய இவரை ஆந்திர கல்வி மற்றும் ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றார். இதையடுத்து காரில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்த பில் கேட்ஸுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்...
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
இந்த சம்பவத்தில் ஷாநவாஸ் மாலிக், அவரது கூட்டாளி அமியா மாலிக், ஷாநவாஸின் தாய் மற்றும் மற்றொருவர் என நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் மாலிக் மற்றும் அவரது தாய்...
ராஜஸ்தானில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம், பிவாடி தொழிற்பேட்டையில் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையில் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று காலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கட்டிடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதில் மேலும் 3 முறை வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது அந்த...
டெல்லியில் பிரம்மாண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பாரத் மண்டபத்தில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முக்கிய அரங்குகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பல்வேறு நிறுவனங்களின் ஏஐ நிபுணர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் மற்றும்...
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது ரயில்வே வேலை வழங்க லாலு குடும்பத்தினர் லஞ்சமாக நிலம் பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுவரை 2 குற்றப் பத்திரிகைகள், 2 துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி...
கேரள மாநிலத்தில் விருது பெற்ற 62 வயது விவசாயி ஒருவர் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செறுபுழா அருகே உள்ள இடவரத்தைச் சேர்ந்தவர் அம்பாட்டு இலியாஸ் (62). விவசாயியான இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணூர் மற்றும் அண்டை மாவட்டமான காசர்கோடு மலைப் பகுதிகளில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறி பயிரிட்டு வந்தார்.
மேலும் மாநில அரசின் சிறந்த விவசாயிக்கான...
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடும் என்று...
2016-ல் ‘அன்சார் இன்டரிம்’ பெயரில் தீவிரவாத அமைப்பை உருவாக்கிய மருத்துவர்கள்: என்ஐஏ விசாரணையில் தகவல்
admin - 0
கடந்த 2016ம் ஆண்டிலேயே பல மருத்துவர்கள் இணைந்து அன்சார் இன்டரிம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் காரில் இருந்த மருத்துவர் உமர் இந்த தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது....
காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட போலி வங்கி கணக்குகளை பாதுகாப்பு முகமைகள் கண்டறிந்து முடக்கியுள்ளன. இந்த வங்கி கணக்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, பிரிவினைவாத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் சைபர் குற்றங்களின் நிதி ஆதாரமாக இத்தகைய கணக்குகள் விளங்குகின்றன. திருடப்பட்ட பணத்தை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ‘கிரிப்டோ கரன்சி’களாக மாற்றுவதற்கு இக்கணக்குகளே முக்கியப்...
எப்ஸ்டீன் விழாவில் கபில் சிபலுக்கு விருது வழங்கப்பட்டது: பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு
admin - 0
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், அவர் சேகரித்து வைத்திருந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதில், அதிபர் ட்ரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் பாஜக...










