Google search engine
கென்​-பெட்வா நதி இணைப்பு திட்​டத்தை பின்​பற்​றி, மாநிலங்​களுக்கு இடையே​யான நதிநீர் பிரச்​சினை​களுக்கு ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணுங்​கள் என மாநிலங்​களை பிரதமர் மோடி அறி​வுறுத்​தி​யுள்​ளார். மத்​திய மற்​றும் மாநில அரசுகளின் முயற்​சிகளை தடை​யின்றி ஒருங்​கிணைப்​ப​தன் மூலம், திட்​டங்​களை சரி​யான நேரத்​தில் செயல்​படுத்​து​வதை நோக்​க​மாகக் கொண்ட ஒரு தகவல் மற்​றும் தகவல் தொடர்பு தொழில்​நுட்​பம் சார்ந்த பன்​முக தளம் பிரக​தி. இதன் 51-வது கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று முன்தினம்...
மேகேதாட்டு அணை திட்ட விவ​காரத்​தில் தாக்​கல் செய்த மனுவை​யும், மறு ஆய்வு மனுவை​யும் உச்ச நீதி​மன்​றம் தள்ளு​படி செய்த நிலை​யில், அடுத்த கட்ட நடவடிக்​கை​யாக சீராய்வு மனு தாக்​கல் செய்​வ​தா, தேசிய பசுமை தீர்ப்​பா​யத்தை நாடு​வதா என்​பது குறித்து தீவிர ஆலோ​சனை​யில் தமிழ்​நாடு அரசு ஈடு​பட்டு வரு​கிறது. மேகே​தாட்டு அணை திட்​டம் தொடர்​பான விரி​வான திட்ட அறிக்கையை ஆய்வு செய்​யக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்​துக்​குத் தடை​வி​திக்​கக் கோரி தமிழக...
தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்​மச்​சாவு வழக்​கில் அவரது மாமி​யாரும், ஓய்வு பெற்ற நீதிப​தி​யு​மான கிரி​பாலா சிங்கை சிபிஐ அதி​காரி​கள் நேற்று கைது செய்​தனர். தெலுங்கு நடிகை​யான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்​டில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். இது தொடர்​பாக வரதட்சணை கொடுமை மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டிய​தாக ட்விஷா​வின் கணவரும் வழக்​கறிஞரு​மான சமரத் சிங், முன்​னாள்...
மரண தண்​டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு​ சிறை​யில் இருந்த அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​ திரும்பினார். கேரளாவைச் சேர்ந்த அப்​துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்​டுநராகப் பணியாற்றினார். அப்​துல்​லா​வின் மகன் ஒரு மாற்​றுத்​திற​னாளி. அந்த சிறு​வனை​யும் பராமரிக்​கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்​பட்​டது. ஒரு​நாள் சிறு​வனை காரில் ரஹீம் அழைத்துச் சென்​ற​போது சிறு​வனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் ​குழாய் மீது ரஹீமின்கை தவறு​தலாகப்...
ரீல்ஸ் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ முயற்சியை ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாரா லோகேஷ் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: “முதலீட்டாளர்களை அணுக அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட முன்முயற்சியை பாராட்டுகிறேன். தொழில்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தை சந்தைப்படுத்த வேண்டும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும், வேலைவாய்ப்பை அளிப்பவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். வெற்றுக்...
 சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்​கில் கேரள முன்​னாள் முதல்​வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. கடந்த மாதம் நடை​பெற்ற கேரள சட்​டப்​பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி வெற்றி பெற்​றதை தொடர்ந்​து, மார்க்​சிஸ்ட் மூத்த தலை​வர் பின​ராயி விஜயன் சமீபத்​தில் ஆட்​சியை இழந்​தார். இதையடுத்து அவர் கேரள சட்​டப் பேர​வை​யின் எதிர்க்​கட்சி தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளார். பின​ராயி விஜயனின் மகளும் முன்​னாள் தகவல்...
ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிகானெரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள், 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை மாவட்டங்களில் நடக்கும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்...
அனைத்து மக்​களுக்​கும் பொது​வான சட்​டங்​களை கொண்டு வர பொது சிவில் சட்​டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வரு​கின்​றன. உத்​த​ராகண்ட, குஜ​ராத் மாநிலங்​களை அடுத்து அசாம் சட்டப்பேரவை​யில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் ஒரு​வர் ஒன்​றுக்கு மேற்பட்ட திரு​மணம் செய்​தால் 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க​வும், திரு​மணம் செய்​யாமல் ஒன்​றாக சேர்ந்து வாழ்வதைபதிவு செய்​யா​விட்​டால் 3 ஆண்டு சிறை தண்​டனை...
இன்று நாட்​டின் பெரும்​பாலான மாநிலங்​களில் பக்ரீத் கொண்​டாடப்​படு​கிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்​ரீத் நேற்றே கொண்​டாடப்​பட்​டது. வழக்​க​மாகப் பக்ரீத் சிறப்பு தொழுகை​யின் போது மசூ​திக்​குள் போது​மான இட வசதி இருப்​ப​தில்​லை. அதனால், மசூ​திக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தி வந்​தனர். தற்​போது இதற்கு எதிர்ப்​பு​கள் கிளம்பி உள்​ளன. உ.பி.​யில் சாலைகளில் தொழுகை நடத்த அனு​மதி இல்​லை. மத வழி​பாட்​டுத் தலங்​களில் மட்​டுமே தொழுகை நடத்த வேண்​டும். அதிக...
குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகத்​தில் கோகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக மாநில தீவிர​வாத தடுப்​புப் படை​யினருக்​குத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து கடந்த செவ்​வாய்க்​ கிழமை நள்​ளிரவு துறைமுகத்துக்கு வந்த குஜ​ராத் ஏடிஎஸ் படை அதி​காரி​கள், கடலோரக் காவல் படை அதி​காரி​களு​டன் சோதனை நடத்​தினர். அப்​போது கடல் பகு​தி​யில் ஒரு கப்​பல் நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்டு இருப்​ப​தைக் கண்ட அதி​காரி​கள் அந்​தக் கப்​பலில் சோதனை நடத்​தினர். அப்​போது அங்கு 6 பைகளில் 118 கிலோ எடை​யுடைய...