Google search engine
காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்…புல்வாமா ஹீரோக்களை நாம் கொண்டாடவேண்டாம் என்று பாட்னாவில் இந்து ஷிவ் பவானி சேவா அமைப்பினர் கோஷம் எழுப்பினர். நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிஹார் மாநிலம் பாட்னாவிலுள்ள பல்வேறு பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் ஆண்கள், பெண்கள் ஜோடியாக காதலர் தினத்தைக் கொண்டாடினர். அப்போது அங்கு வந்த இந்து ஷிவ் பவானி சேவா அமைப்பினர், “காதலர் தினத்தை நாம் கொண்டாட வேண்டாம். பொது இடங்களில்,...
ஒரு தலைபட்சமாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால், ஆத்திரமடைந்த காதலன், காதலர் தினமான நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். திருப்பதியை அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், மதனபல்லி அம்மாசெருவு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பியாரம்பல்லி பகுதியை சேர்ந்த பியூட்டி பார்லரில் பணியாற்றும் ஒரு பெண்ணை ஒரு தலைபட்சமாக கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலை அந்த பெண்...
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியிருப்பது நம்பிக்கையின் ஒளிக்கீற்று என்று குகி பழங்குடியினர் கூறியுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மைதேயி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே கடந்த 2023-ல் ஏற்பட்ட இனக் கலவரத்துக்கு பிறகு அங்கு இன்னும் இயல்நிலை திரும்பாத சூழலில் முதல்வர் பிரேன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். இதையடுத்து மணிப்பூரில் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர்...
கேரளா கோயில் திரு​விழா​வின் போது யானைகள் மிரண்டு ஓடிய​தில் 3 பக்தர்கள் உயிரிழந் தனர். 30-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்​தனர். கேரள மாநிலம் கோழிக்​கோடில் மனக்​குலங்கரா விஷ்ணு கோயில் உள்ளது. இங்கு நேற்று​முன்​தினம் திரு​விழா நடைபெற்​றது. அதற்காக யானைகள் ஊர்வலம் நடத்​த​வும் அரசு அனுமதி பெற்​ற​தாகக் கூறப்​படு​கிறது. அதற்காக 2 யானைகள் அலங்​கரிக்​கப்​பட்டு அழைத்து வரப்​பட்டன. அன்று மாலை 6 மணிக்கு திரு​விழா கோலாகலமாக தொடங்​கியது. அப்போது பட்டாசுகள் வெடித்து மேள,...
பெண் நீதிபதி மீது குற்றவாளி ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத் தலைநகர், ஹைதராபாத் செர்லோபல்லி மத்திய சிறையில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் இருப்பவர் கரண்சிங் என்கிற சர்தார் சீமகுர்த்தி (22). இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி, ஹைதராபாத் வெளி வட்டார சுற்றுப்பாதை பகுதியில், காரில் சென்றவர்களை வழிமறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒருவரை கொலை...
உத்தர பிரதேச மாநிலம் வாரா ணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடங்​கு​கிறது. பிரதமர் நரேந்திர மோடி​யின் மக்களவை தொகுதி வாராணசி​யில் கடந்த 2 ஆண்டு​களாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்​றது. வாராணசிக்​கும் தமிழகத்​துக்​கும் பழைமை காலத்​தில் இருந்து உள்ள உறவை புதுப்​பிக்​கும் வகையில் இந்நிகழ்ச்​சி​யைப் பிரதமர் மோடி நடத்த ஏற்பாடு செய்​தார். தற்போது காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 இன்று தொடங்​கு​கிறது. பிற்​பகல் 3.00...
தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​துக்​களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை போலீ​ஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன. 1991-96 காலகட்​டத்​தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​துக்கு​வித்​ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குதொடரப்​பட்​டது. இவ்வழக்​கின் விசா​ரணை​யின்​போது தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை போலீ​ஸார் அவரது வீட்​டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவை​கள், காலணி​கள், கைக்​கடி​காரங்​கள், வீட்டு உபயோக பொருட்​கள், சொத்​துக்​களின் ஆவணங்கள்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது வரும் 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக கடந்த 12-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றார். கடந்த 13-ம் தேதி அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட், அமெரிக்க தேசிய பாதுகாப்பு...
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மனுவை அனுப்பியுள்ளது. 2017-ல் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. மேலும், சத்யேந்தர் ஜெயின் அமைச்சராக இருந்தபோது ரூ. 11.78 கோடிக்கு செயல்படாத நிறுவனங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ-யும்...
அதானி விவகாரத்தில் இந்தியாவில் மவுனம் காப்பதும், வெளிநாடுகளில் அது தனிப்பட்ட பிரச்சினை என நழுவிக் கொள்வதும் பிரதமர் நரேந்திர மோடியின் வாடிக்கையாக உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடியிடம் அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் ட்ரம்ப்புன் விவாதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தனிப்பட்ட பிரச்சினைகளை...