உத்தர பிரதேசத்தின் அயோத்தி யில் உள்ள ராமர் கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கருவறையில் நுழைய மட்டும் அனுமதிப்பதில்லை.
இச்சூழலில், ராமர் கோயிலில் கடந்த வாரம் வந்த ஒரு முஸ்லிம் இளைஞர், சால்வை விரித்து தொழுகை நடத்த முயற்சித்தார். உடனடியாக இதைப் பார்த்த பாதுகாப்பு போலீஸார் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர்.
போலீஸாரின் விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அயோத்தியைச் சேர்ந்த துறவிகள் மத்தியில் கடும்...
மத்திய அரசு நிதிப் பகிர்வில் பாகுபாடு காட்டுவதாக கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது முதல்வர் பினராயி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஒரு மாநிலம் அசாதாரண போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இந்நில மக்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம். அனைத்து அதிகாரங்களும் எங்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறி மத்திய...
தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் இணைய வேண்டும்: ஜெர்மனி, இந்திய பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தல்
admin - 0
தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் இணைய வேண்டும் என ஜெர்மனி பிரதமர் மெர்ஸும், பிரதமர் மோடியும் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அகமதாபாத் விமான நிலையம் வந்த அவருக்கு அரசு உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பிரதமரான பிறகு அவர் ஆசியாவுக்கு பயணம் செய்திருப்பது இதுதான் முதல்முறை.
கடந்த 10...
மாணவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டும்: சிபிஆர் அறிவுரை
admin - 0
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் தங்கள் அறிவையும், திறனையும், நாட்டுக்கு சேவை செய்வதில் அர்ப்பணிக்க வேண்டும். கல்வி என்பது வெறும் பட்டங்களை வழங்குவதோடு நின்றுவிடாமல், நற்பண்புகளை வளர்ப்பதாகவும், அறிவை வலுப்படுத்துவதாகவும், ஒவ்வொரு தனிமனிதனும் தன் சொந்தக் காலில் நிற்பதற்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தருவதாகவும் அமைய வேண்டும்.
கல்வி,...
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்த நாள் விழா பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன.23-ம் தேதி அந்தமான் வருகிறார்.
நாட்டின் சுதந்திரத்துக்காக தனி ராணுவத்தை உருவாக்கி போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 129-வது பிறந்த நாள் ஜன.23-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அந்தமான் நிகோபார் தீவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று மத்திய...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர் அரூப் பாசு தலைமையிலான மருத்துவர்கள், சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை...
சோமநாதர் கோயில் வரலாறை மறைக்க முயற்சி நடைபெற்றதாகவும் அது முறியடிக்கப் பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினம் கடற்கரையில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. 1,026-ல் கஜினி முகமது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு 1,000 ஆண்டுகளைக் கடந்து சோமநாதர் கோயில் கம்பீரமாக நிற்கிறது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 8-ம் தேதி சோமநாதர் சுயமரியாதை பெருவிழா தொடங்கியது.
இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம்...
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பிரதிநிதிகளை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்தார்.
கேரளாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், "கேரள மக்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே பாதுகாக்க முடியும். சபரிமலை தங்கம் திருடு போன வழக்கின் எப்ஐஆர்-ஐ பார்த்தேன். குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில்...
பாலியல் வன்கொடுமை புகாரில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மம்கூடத்தில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாலியல் புகார் வழக்கில் ராகுல் தலைமறைவானார்.
இந்நிலையில், எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிதி ரீதியாக சுரண்டுவதாகவும் ஒரு பெண்...
ஹரியானாவின் குருகிராம் மாவட்டம் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) முகாமில் தேசிய ஐஇடி தரவு மேலாண்மை அமைப்பு (என்ஐடிஎம்எஸ்) அமைக்கப்பட்டுள்ளது.
இது, தீவிரவாதத்துக்கு எதிரான அடுத்த தலைமுறை பாதுகாப்பு கேடயமாகவும் நாட்டில் நடைபெறும் அனைத்து வகை குண்டுவெடிப்புகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாகவும் செயல்படும் என கூறப்படுகிறது. இது, அனைத்து வகை குண்டுவெடிப்புகளையும் துல்லியமாக ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன சாதனங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் என்ஐடிஎம்எஸ்...
