தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பதவி அளிக்கப்பட உள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பிஜேஒய்எம்) தேசிய தலைவராக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
கர்நாடகா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை (40). தனது பணியில் 'கர்நாடகா சிங்கம்’ என பெயரும் பெற்றிருந்தார். கடந்த 2017-ல் திடீரென பாஜகவில் இணைந்தவருக்கு எவரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது முதல்...
திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி எஸ்.பி.யிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசாலையில் கடந்த 3 மாதங்களில் உடல்நலம் குன்றியும், சரிவர தீவனம் வழங்கப்படாமலும் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் கன்றுகள் இறந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர்...
சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாகி விட்டோம்: முர்ஷிதாபாத் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை
admin - 0
சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாக மாறி வசிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்று முர்ஷிதாபாத் நகரத்தில் வசிக்கும் பெண்கள் முறையிட்டு வருகின்றனர். வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முர்ஷிதாபாத்தில் கடந்த வாரம் நடந்த போராட்டம், வன்முறைச் சம்பவங்களில் முடிந்தது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
வன்முறைச் நிகழ்ந்தபோது வீட்டின் உள்ளே ஒளிந்து இருந்த...
சகோதரர்கள் இருவரும் பைக்கின் பின்புறம் ஒரு கோழிக்கூண்டுக்குள் அமர்ந்து தந்தையுடன் ஜாலியாக பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு தந்தை பைக் ஓட்டி செல்கிறார். அந்த பைக்கின் பின்புறம் கோழிக்கூண்டுக்குள் தனது இரு மகன்களையும் உட்கார வைத்துக்கொண்டு அழைத்து செல்கிறார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 33 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த வீடியோ ஹைதராபாத் நாகோல் அருகே உள்ள பண்ட்ல கூடா எனும்...
பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
admin - 0
குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நாட்டில் குழந்தை கடத்தல் சம்பவம் அதிகளவில் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரத்தின்படி, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2000 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் தெலங்கானா,...
காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் முஸ்லிம்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பிரதமர் கருத்து
admin - 0
முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் ஹிசார் விமான நிலையத்தில் புதிய முனையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அம்பேத்கரின் பிறந்த நாளில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் பேசியதாவது:
பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என...
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க தேர்தல் நடத்த வேண்டும்: சுவேந்து அதிகாரி கோரிக்கை
admin - 0
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது....
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 15 வெளிநாட்டினரை நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: டெல்லியில் மோகன் கார்டன், உத்தம் நகர் பகுதிகளில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் விசா காலத்துக்கு பிறகும் இந்தியாவில் தங்கியிருந்த 15 வெளிநாட்டினர் சிக்கினர்.
இவர்களில் 12 பேர் நைஜீரியாவையும் இருவர் வங்கதேசத்தையும் ஒருவர் ஐவரி கோஸ்ட் நாட்டையும் சேர்ந்தவர்கள்.சரிபார்ப்புக்கு பிறகு இவர்களை நாடு கடத்த வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு...
குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ்...
மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் கைது: ரூ.22 லட்சம் ரொக்கம், துப்பாக்கிகள் பறிமுதல்
admin - 0
தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எப்) அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு இம்பால் மாவட்டத்தின் வெவ்வேறு இடத்திலிருந்து இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த யுஎன்எல்எப் தீவிரவாதி ஒருவர் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து...










