ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா. அமைதிப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஐ.நா. அமைதிப்படை தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு ‘‘டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்’’ அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் இந்திய ராணுவ பெண் அதிகாரி மேஜர் அபிலாஷா பராக் லெபனானில்...
பஞ்சாபை சேர்ந்த பெண் ஒருவர், தனது பச்சிளம் ஆண் குழந்தையை, போதைப்பொருளுக்கு அடிமையான தனது முன்னாள் கணவன் ரூ.5 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் போலீஸாரிடம் ஷிவானி என்ற பெண் அளித்துள்ள புகார் வருமாறு: எனக்கும் சிவா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் நானும் எனது கணவரும்...
மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 783 சஞ்சீவினி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. சஞ்சீவினி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,000-க் கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.80,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தமோ நகரில் செயல்படும் சஞ்சீவினி மருத்துவமனையில் போலி மருத்துவர்கள்...
ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பலிகுடாவில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்ரா.
இவர் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்றும் பலிகுடாவில் பெஹ்ராவுக்கு தொடர்புடைய 9 இடங்களில் நேற்று முன்தினம் ஒரேநேரத்தில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ.2 கோடி...
ஆர்எஸ்எஸ் எனும் தாய் அமைப்பின் அரசியல் பிரிவாக உருவானது தான் ஜன சங்கம். பிறகு 1977-ல் இது பாஜகவாகி தற்போது, 3-வது முறை மத்திய கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகிக்கிறது.
நாட்டில் பெரிய மாநிலமான உ.பி. உட்பட 21 மாநிலங்களிலும் பாஜகவும் அதன் கூட்டணியும் ஆட்சியில் உள்ளன. பழம்பெரும் கட்சி காங்கிரஸின் பல்வேறு சாதனைகளை முறியடித்து தற்போது நாட்டில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது பாஜக. ஆனால், தென் மாநிலங்களில் கர்நாடகாவைத்...
பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு காலம் கூட பதவியில் நீடிக்கமாட்டார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், மோடி அரசு நிறுவன ரீதியான கிளர்ச்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இது குறித்த உள் விவரங்கள் தமக்கு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற ஆதிவாசி காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு என்பது சர்வதேசப் பொருளாதார அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் ஒரு...
குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலை வளாகத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் அறிவுப் பகிர்வு மற்றும் வழிகாட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதற்காக, மூத்த மற்றும் இளம் சிவில் சர்வீஸ் அதிகாரிகளைப் பரிந்துரைக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள நிதி ஆயோக்கில் தலைமைச் செயலாளர்களின் 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘முன்னாள்...
பிரதமர் நரேந்திர மோடி அரசு அடுத்த வாரம் 12 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதை பாஜக விமரிசையாகக் கொண்டாட உள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்ற பாஜக அரசின் பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். இவர் தொடர்ந்து 12 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து வருகிறார். அடுத்த வாரம் 12 ஆண்டுகளை அவர் நிறைவு செய்கிறார். இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், நாடு தழுவிய...
பிஹாரில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம், பிரம்மபுரா பகுதியில் பிரசாத் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதுடன் அறை முழுவதும் அடர்ந்த புகையும் நிறைந்தது.இந்நிலையில் இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர்...
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் செயல்படும் டிசிஎஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் அவர்களை கட்டாய மத மாற்றம் செய்ததும் கடந்த ஏப்ரலில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக 8 டிசிஎஸ் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
டிசிஎஸ் நிறுவனத்தைப் போன்று மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படும் விப்ரோ நிறுவனத்திலும் மதமாற்ற முயற்சி நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் புனேவில் நேற்று முன்தினம்...










