Google search engine
உத்தர பிரதேச மாநிலத்​தில் விரை​வில் ஸ்வரண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள உணவகங்​களில் கடை உரிமை​யாளர் பெயர் உட்பட முழு விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவு பின்​பற்​றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்​கள் 5,000 பேர் ஆங்​காங்கே சோதனை நடத்தி வரு​கின்​றனர். அவர்​களில் ஒரு குழு​வினர் முசாபர்​நகரின் ‘பண்​டிட்ஜி வைஷ்னோவ்...
இமாச்​சலபிரதேசம், மண்டி மாவட்​டத்​தின் பல்​வேறு இடங்​களில் கடந்த செவ்​வாய்க்​கிழமை 10 மேகவெடிப்​பு​கள், 3 திடீர் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு​கள் ஏற்​பட்​டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக், கர்​சோக் ஆகிய பகு​தி​களில் இருந்து 11 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன. இந்​நிலை​யில் மேலும் இரு​வரின் உடல்​கள் நேற்று மீட்​கப்​பட்​டதை தொடர்ந்து உயி​ரிழப்பு 13 ஆக அதி​கரித்​துள்​ளது. மேலும் 29 பேரை தேடும் பணி நடை​பெறுகிறது. இந்​தப் பேரிடரில் 162 கால்​நடைகள் இறந்​தன. மேலும்...
 க​னமழை காரண​மாக உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சோன்​பிர​யாக் அருகே நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால், கேதார்​நாத் யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது. உத்​தர​காண்ட் மாநிலத்​தில் நேற்று முன்​தினம் கனமழை பெய்​தது. இதனால் சோன்​பிர​யாக் அரு​கே​யுள்ள முங்​காட்​டியா என்ற இடத்​தில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதனால் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கேதார்​நாத் யாத்​திரையை மாவட்ட நிர்​வாகம் தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ளது. கவுரி​குந்த் பகு​தியி​லிருந்து திரும்​பிய சில பக்தர்கள் நிலச்​சரிவு ஏற்​பட்ட பகு​தி​யில் சிக்​கினர். அவர்​களை மாநில பேரிடர் மீட்பு குழு​வினர் பாது​காப்​பாக மீட்டு...
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசுக்கு கட்சி செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் ஆதர​வுடன் வெளிவந்​துள்ள இந்த மசோதா ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது...
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக்...
பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திர பாஜகவின் முன்னாள் தலைவர் புரந்தரேஸ்வரி ஆகியோர் அந்தப் போட்டியில் உள்ளனர். பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின்...
 ஜாம்​பி​யா​வில் நிலத்​துக்கு அடி​யில் இருக்​கும் தாமிரம், கோபால்ட் தாது படிமங்​களை ஆராய புவி​யிய​லா​ளர் குழுவை மத்​திய அரசு அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: எரிசக்தி மாற்​றத்​துக்கு அவசி​ய​மான முக்​கிய கனிமங்​களை பெறு​வதற்​கான முயற்​சிகளை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது. இந்​நிலை​யில் தாமிரம், கோபால்ட் தாது ஆய்வுக்காக இந்​தி​யா​வுக்கு ஜாம்​பியா அரசு இந்த ஆண்டு 9,000 சதுர கி.மீ. (3,475 சதுர மைல்) நிலம் ஒதுக்க ஒப்​புக்​கொண்​டது. மின்​சார வாக​னங்​கள்...
கர்​நாட​கா​வின் மங்​களூருவை சேர்ந்​தவர் பிலால் அகமது டெலி (21). பிளஸ் 2 வரை மட்​டுமே படித்​துள்ள அவர், இணையதள வடிவ​மைப்பு தொடர்​பாக ஓராண்டு டிப்​ளமோ படிப்​பை​யும் நிறைவு செய்​துள்​ளார். இதன்​பிறகு துபாய், பஹ்ரைன் உள்​ளிட்ட நாடு​களில் பணி​யாற்றி உள்​ளார். தற்​போது குஜ​ராத்​தின் சூரத்​தில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் பிலால் பணி​யாற்றி வரு​கிறார். அவரது மாத ஊதி​யம் ரூ.1.25 லட்​சம் ஆகும். கடந்த சில வாரங்​களுக்கு முன்பு மும்​பை​யில் உள்ள ஐஐடி...
மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நரசிங்பூர் எஸ்.பி. மிருககி டேகா கூறுகையில், “இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அபிஷேக் கோஸ்டி என்ற...
டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்​டல் இந்தியா திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் வெற்​றிகர​மாக 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பத்து ஆண்​டு​களுக்கு முன், இந்தியா மிகுந்த நம்​பிக்​கை​யுடன் அறியப்​ப​டாத...