இமாச்சலில் கனமழை: உயிரிழப்பு 13 ஆக உயர்வு

0
45

இமாச்​சலபிரதேசம், மண்டி மாவட்​டத்​தின் பல்​வேறு இடங்​களில் கடந்த செவ்​வாய்க்​கிழமை 10 மேகவெடிப்​பு​கள், 3 திடீர் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு​கள் ஏற்​பட்​டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக், கர்​சோக் ஆகிய பகு​தி​களில் இருந்து 11 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில் மேலும் இரு​வரின் உடல்​கள் நேற்று மீட்​கப்​பட்​டதை தொடர்ந்து உயி​ரிழப்பு 13 ஆக அதி​கரித்​துள்​ளது. மேலும் 29 பேரை தேடும் பணி நடை​பெறுகிறது. இந்​தப் பேரிடரில் 162 கால்​நடைகள் இறந்​தன. மேலும் 50-க்​கும் மேற்​பட்ட வீடு​கள், 104 கால்​நடை கொட்​டகைகள், 31 வாக​னங்​கள், 14 பாலங்​கள் மற்​றும் பல சாலைகள் சேதம் அடைந்​தன.

அதேவேளை​யில் மண்​டி​யில் 316 பேர் உட்பட 370 பேர் மீட்​கப்​பட்​டனர், 5 நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன என்று மாநில அவசர நடவடிக்கை மையம் தெரி​வித்​துள்​ளது. அடுத்த 24 மணி நேரத்​தில் காங்க்​ரா,மண்​டி உள்ளிட்ட 6 மாவட்​டங்​களின் சில பகு​தி​களில் திடீர் வெள்ள அபா​யம் இருப்​ப​தாக நேற்று எச்​சரிக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here