கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கர்நாடக மாநில பொதுமக்களின் நலன் கருதி, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை, நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதை உற்பத்தி செய்வது, பதுக்கி வைப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது போன்றவை தடை செய்யப்படுகிறது. இவற்றை எந்தவொரு பெயரிலும் சந்தையில் விற்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.















