கர்நாடக மாநிலம் கொப்பலில் மாகாணங்களுக்கு இடையேயான ஏற்றதாழ்வை தீர்ப்பது தொடர்பான கருத்தரங்கம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதில் முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது: கர்நாடகாவில் யார் முதல்வராக இருந்தாலும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது. ஊழலில் எப்போதும் கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது.
அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதால் தரமான வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில்லை. சுதந்திரத்துக்கு முன்பு கட்டிய அரசு கட்டிடங்கள்...
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத்திலும், திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் நாராவாரிபல்லி கிராமத்திலும் சொந்த வீடு உள்ளது.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலைநகர் அமராவதியில் சொந்த வீடு கட்ட முடிவு செய்தார். இதனை தொடர்ந்து, நேற்று வெலகபுடி செயலகம், இ-9 தேசிய நெடுஞ்சாலையில் 1,455 சதுர அடியில் வீடு கட்ட நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அடிக்கல் நாட்டு விழாவில்மனைவி புவனேஸ்வரியுடன் தம்பதி சமேதராக பூமி...
குஜராத்தின் அகமதாபாத் நகரில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கார்கே பேசியதாவது: கடந்த 1924-ம் ஆண்டு கர்நாடகாவின் பெலகாவில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை மகாத்மா காந்தி ஏற்றார். இதை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி மிகப்பெரிய விழாவாக கொண்டாடி...
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியானவுடன், நாடு தற்போது உள்ள நிலையைவிட வலுவாக முன்னேறும்’’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது வர்த்தக போரை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இறக்குமதிக்கு 26 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக...
கேரள மாநிலம் கண்ணூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், உதயகிரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ரஃபி. மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2020 மார்ச் மாதம், கரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது 14 வயது 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு அந்த மாணவியை அச்சுறுத்தி 2021 டிசம்பர்...
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க கடந்த மார்ச் மாதத்தில் மையங்கள் தொடங்கப்பட்டன. அப்போது சில பஞ்சாயத்துகளில் ஊதியத்தில் மோசடி அரங்கேறியதாக சிலர் புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த புகைப்படங்களை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, ஏரியில் வேலை செய்யும்போது பெண்களை போல சில ஆண்கள்...
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர், இரண்டு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் எல்லையிலுள்ள சிக்கந்தராவில் பஹரியா பகுதியில் சையத் சாலார் மசூத் காஜியின் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் இந்த தர்காவுக்கு இந்துக்களும் வந்து வணங்கிச் செல்வது...
ராஜஸ்தானில் ஆல்வார் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி உள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்வார் நகரில் கோயில் குடமுழுக்கு விழா ஒன்றில் பங்கேற்றார்.
இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா, அக்கோயில் வளாகத்தில் கங்கை நீரை தெளித்து பூஜைகள் செய்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கியான்தேவ்...
மக்களின் கனவை நிஜமாக்கியது ‘முத்ரா’ திட்டம்: 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
ஏராளமான மக்களின் கனவுகளை நிஜமாக்கியது முத்ரா திட்டம் என்று திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கிலும், தொழில் செய்ய விரும்புவோர், கடின உடல் உழைப்பை பணியாக கொண்ட நபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களை தொழில் முனைவோராக மாற்றி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த பிரதான் மந்த்ரி...
நான் மீண்டும் வங்கதேசம் வருவேன் என தனது கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பிரதமராக பதவி வகித்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு (77) எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின்...










