தமிழில், சொக்கத்தங்கம், கடல்பூக்கள், தென்றல், கோவை பிரதர்ஸ் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் உமா. மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
2006ம் ஆண்டு துஷ்யத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்துக்குப் பிறகு நடிக்கவில்லை. நடிகை சுமித்ராவின் மகளான இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை சில வாரங்களுக்கு முன் அறிவித்த அவர், இப்போது வெளியிட்டுள்ள பதிவில், “கீமோ மற்றும் இம்யூனோ...
நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் என பலர் நடித்துள்ளனர்.
இதில் நடித்தது பற்றி ரோஜா கூறும்போது, “இந்தப் படத்தில் அம்மாவாக நடித்துள்ளேன். கதைப்படி, சென்னையில் குடியேறிய தெலுங்கு குடும்பம் என்பதால் படத்தில் தெலுங்கு பேசி நடித்துள்ளேன். இயக்குநர் பாரி இளவழகன், என்னை மனதில் வைத்து தான் இந்தக் கதாபாத்திரத்தை...
தமிழக முதல்வராகிவிட்டார் விஜய். அவருடன் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இணைந்து நடித்த சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நட்சத்திரம். இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில் எதிரும் புதிருமாக நடித்திருந்தாலும் அவர்களைச் சிறந்த நண்பர்களாகச் சித்தரித்தது 2001-இல் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’.
2008-இல் பிறந்த நான், என் பள்ளிக் காலத்தில் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டேன். பின்னர் 2020-இல் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாடே ஊரடங்கில் சுருண்டபோது, பள்ளிக்குச் செல்ல வாய்ப்பின்றி...
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 9-ஆவது தயாரிப்பான 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வாணவேடிக்கை’. இப்படத்தின் தொடக்க விழாவில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல்.கே.சதீஷின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடித்து முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார்.
'தீராத விளையாட்டுப்...
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ்...
ஒப்பனைக்கலை மற்றும் ஒளிப்பதிவின் அறிவியல்: அழகும் யதார்த்தமும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 41
admin - 0
திரைப்படத்தில் ஒப்பனை (Make-Up) என்பது வெறும் அழகுபடுத்தும் கருவி மட்டுமல்ல. அது ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கும் முக்கியமான கலை. ஒரு நடிகரை இளமையாகவும், வயதான தோற்றத்திலும், நோயுற்றவராகவும், வீரனாகவும் வில்லனாகவும் மாற்றும் சக்தி ஒப்பனைக்கு உண்டு. ஆனால் ஒரு சிறந்த ஒப்பனை, சரியான ஒளிப்பதிவு இல்லாமல் முழுமையடையாது.
அதேபோல், திறமையான ஒளிப்பதிவாளரும் ஒப்பனையின் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் சிறந்த காட்சிகளை உருவாக்க முடியாது. திரைப்பட வரலாற்றில் ஒப்பனையாளரும், ஒளிப்பதிவாளரும் இணைந்து...
மிஷ்கின் இயக்கி இசை அமைத்துள்ள படம், ‘டிரெயின்’. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, பாரத்திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மிஷ்கின் பேசும்போது, “என்னுடைய ‘நந்தலாலா’ படக் கதையைச் சொல்வதற்காகத் தயாரிப்பாளர் தாணு சாரை சந்தித்தேன்....
சில மரணங்கள் ஒரு காய்ந்த இலை காற்றில் பறந்து கண்ணுக்குத் தெரியாமல் பூமியில் விழுந்து மறைவது போல நிகழ்ந்து மறைந்து போகும். சில மரணங்கள் இதயத்தின் ஆழத்தில் நிலநடுக்கத்தை உணரச்செய்து விட்டுப் போகும். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், மிகச்சிறந்த இயக்குநர், மிகச்சிறந்த ஆய்வாளர், மிகச்சிறந்த எழுத்தாளர், மிகச்சிறந்த ஆசிரியர் என கலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஆழமாக இயங்கிக் கொண்டிருந்த அண்ணன் செழியனின் மரணம், அந்தக் காலையின் அமைதியில் அணுகுண்டை...
‘வண்ணத்துப் பூச்சி’ என்ற சிறுவர்களுக்கான படத்தை இயக்கிய ராசி அழகப்பன் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அவரே தயாரிக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ‘விருட்சம்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். ஜென் ஸி தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து...
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பழைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததால், கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இச்சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் மறைவை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சங்கத்தின் தேர்தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ என்ற அணியும் சேரன் தலைமையில்...










